Breaking News

கனகராயன்குளம் சிறுமியின் கொலை! இருட்டடிப்பு நடவடிக்கையில் பொலிஸார்

வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய செ. சரண்யா என்னும் சிறுமியின் மரணம் தொர்பில் பொலிஸாரும் சட்டத் துறையினரும் இருட்டடிப்பு நடவடி க்கையினை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா கனகராயன்குளத்தில் வசித்து வந்த செ. சரண்யா என்ற சிறுமி நோய்வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்திருந்தார்.

இந் நிலையில் இச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம்திகதிசடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடிருந்தது.

இந் நிலையில் பொப்பரவரி மாதம் 28 ஆம் திகதி மன்னகுளம் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்திற்கு நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸாரினால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு மாதமும் 8 நாட்களும் கடந்த நிலையில் வவுனியா மாவட்ட நீதிவான் முகமட் ரிஸ்வான் மற்றும் யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதனையடுத்து உறவினர்களிடம் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர் கனகராயன்குளம் பொலிஸாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இத்தகைய நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படாமல் இருட்டடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை குறித்த சிறுமியின் தந்தை உறவினர்கள் பலர் முன்னால் போராளிகளாக இருந்து யுத்தத்தில் அனைவரும் இறந்துவிட்டதுடன் சிறுமியின் தாயும் இறந்து நிலையில் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சிறுமியின்மரணம் தொடர்பில் தகுந்த விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டு மரணம் தொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். இதனை சகல ஊடகங்களும் கருத்தில் கொண்டு உண்மையை வெளிக் கொண்டுவர பங்களிப்புகளை வழங்க வேண்டும்.