Breaking News

இரு தேசங்­களின் கூட்­டாகவே தீர்வு அமைய வேண்டும்! இந்நிலைப்பாடும் சம்­பந்தனால் நிரா­க­ரிப்பு

எங்­க­ளுடன் எந்த புலம்­பெ­யர்ந்த அமைப்­பு­களோ கட்­சி­களோ பேச்­சு­வார்த்­தைக்கு வரவும் இல்லை. அது தொடர்பில் எந்த முயற்­சியும் மேற்கொள்ளப்பட­வு­மில்லை. 

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸும் தனித்துப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­துள்ள நிலையில் இது மக்­களை குழப்­பு­வ­தற்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தந்­தி­ரோ­பா­ய­மாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பாக வின­வி­ய­போதே மேற் கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்­பாக திரு­கோ­ண­ம­லையில் நடந்த கூட்­டத்தில் இரு தேசம் ஒரு நாடு என்ற நிலைப்­பாடு சாத்­தியம் இல்லை. அது வெற்றுக் கோஷம் என்றும் மக்கள் அந்த நிலைப்­பாட்டை நிரா­க­ரிக்க வேண்டும் என்றும் கூறி­யுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் நிலைப்­பாடு தமி­ழர்­களின் தாயகம் தனித்­தேசம். தமிழ் தேசத்­திற்கு அங்­கீ­காரம் பெற்றே ஆக வேண்டும். அந்த அங்­கீ­கா­ரத்தின் அடிப்­ப­டையில் ஐக்­கிய இலங்­கைக்குள் ஒரு சமஷ்டி தீர்­வுக்குள் போகலாம். தமிழ் தேசத்­தி­னு­டைய இறை­மையின் அடிப்­ப­டை­யிலும் தமிழ் மக்­க­ளு­டைய சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டை­யிலும் தான் சிங்­கள தேசத்­துடன் இணைந்து ஒரு சமஷ்டி தீர்­வுக்கு நாங்கள் இணங்­கலாம். தேசங்­களின் கூட்­டாக இந்த தீர்வு அமைய வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை சம்­பந்தன் பகி­ரங்­க­மாக நிரா­க­ரித்­துள்ளார். அப்­ப­டிப்­பட்ட நிலையில் கொள்கை இணக்­கப்­பாடு வரப்­போ­வ­தில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்­னணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் ஆகி­யன கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே­றி­யது கொள்கை பிரச்­சி­னையால்தான். இந்த நிலைப்­பாட்டை விட்டு கூட்­ட­மைப்பு வெளியேறி ஒற்­றை­யாட்­சிக்குள் 13ஆம் திருத்­தத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றது என்ற கார­ணத்­தினால் தான் நாம் வெளியே­றினோம். இன்றும் கூட சம்­பந்தன் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார். இத்­த­கைய நிலையில் எங்­க­ளுக்கும் கூட்­ட­மைப்­புடன் இணங்கி செயற்­ப­டு­வ­தற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அது மட்­டு­மல்ல வரு­கின்ற தேர்­தல்­களில் த­னியாக வடக்கு, கிழக்கில் போட்­டி­யிட முடி­வெ­டுத்­துள்ளோம்.

எங்­க­ளுடன் எந்த புலம்­பெ­யர்ந்த அமைப்­பு­களோ, கட்­சி­களோ பேச்­சு­வார்த்­தைக்கு வரவும் இல்லை, அது தொடர்பில் எந்த முயற்­சியும் இல்லை. தற்­போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தன்னிச்சையாக போட்டியிடப்போகின்றன என்று அறிவித்துள்ள நிலையில் மக்களை குழப்பி எங்கள் பக்கம் மக்கள் திரும்பாமல் இருப்பதற்கு கூட்டமைப்பின் தந்திரோபாயமாகும் இது.என தெரிவித்துள்ளார்.