Breaking News

வடக்கு கிழக்கில் மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட தீய சக்திகள் முயற்சி- விக்­கி­ர­ம­பாகு

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லை­யா­னது மிகவும் கண்­டிக்கத்தக்­கது இதில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்கும் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரிவித்தார்.

இதே­வேளை இந்த சம்­ப­வத்தை அடி­ப் ப­டை­யாக கொண்டு வடக்கு,கிழக்கில் மீண்டும் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­வதன் மூலம் அத­னூடாக அர­சியல் இலாபம் காண ஒரு சில சக்­திகள் முயற்­சிப்­ப­தா­கவும் இது தொடர்பில் மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நவ­சம சமாஜக் கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லை­யா­னது மிகவும் கண்­டிக்­க­த்தக்­கது. இந்த சம்­ப­வத்தை கண்­டித்தும் நீதி வேண்­டியும் மக்கள் தொடர்ச்­சி­யாக ஒற்­று­மை­யுடன் ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­ப­டு­வது மிகவும் வர­வேற்­க­த்தக்­கது.

இத­னி­டையே இந்த சம்­ப­வத்தை அடி­ப்ப­டை­யாக கொண்டு வடக்கு, கிழக்கில் ஒரு சில அடிப்­ப­டை­வாத சக்­திகள் மீண்டும் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­வதன் மூலம் பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்தி அத­னூடாக அர­சியல் இலாபம் காண முயற்­சிக்­கின்­றனர். எனவே இது தொடர்பில் மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும்.

வட ­கி­ழக்கு பகு­தியில் யுத்­தத்தின் பின்னர் இன்று மக்­க­ளி­டையே ஜன­நா­யகம் ஒன்று மலர்ந்­துள்­ளது. இவ்­வா­றான நிலையில் இது போன்ற சம்­ப­வங்கள் எம்மை கவ­லை­ய­டைய செய்­கின்­றன. நல்­லாட்­சியின் கீழ் இவ்வாறான செயற் பாடுகளுக்கு எவ்வாறான சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.