குற்றவாளிகளை பொது இடத்தில் தண்டிக்க வேண்டும் (காணொளி)
புங்குடுதீவு மாணவி வித்தியா மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல்
வன்முறை மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைகளையும் கொழு ம்புக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடு குற்றவாளிகள் தப்பிப்பதற்கே வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று சபையில் வலியுறுத்தினார்.
வன்முறை மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களையும் விசாரணைகளையும் கொழு ம்புக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடு குற்றவாளிகள் தப்பிப்பதற்கே வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று சபையில் வலியுறுத்தினார்.
எனவே சம்பந்தப்பட்டோரை யாழ்ப்பாணத்திலேயே தடுத்து வைத்து யாழ். நீதிமன்றத்திலேயே விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வரலாற்றில் எந்தவொரு தமிழரும் நீதிமன்றங்களுக்கு கல்வீச்சு நடத்தியதும் கிடையாது தாக்குதல் மேற்கொண்டதும் கிடையாது. யாழ். மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பி நீதிமன்றத்துக்கு கல்வீச்சை மேற்கொண்டது அங்குள்ள இராணுவ ஒட்டுக்குழுவே ஆகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கல்வி அதிகார சபை (தாக்கல்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீதரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிரான மக்கள் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகவே இங்கு பார்க்கப்படுகிறது. அங்கு இடம்பெற்றது சிங்களவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. வித்தியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவரை படுகொலை செய்த கொடியவர்களுக்கு உச்சபட்சமான தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தியே ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த காலங்களில் வடக்கில் நிகழ்ந்த பாரதூரமான சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தீர்வுகள் கிடைக்க பெறவில்லை. இதன் காரணமாகவே வித்தியா தொடர்பான விடயமும் மூடி மறைக்கப்பட்டு விடக் கூடாது என்ற வகையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். எனினும் வட்டுக்கோட்டையில் இருந்து வந்த குழு ஒன்றினாலேயே நீதிமன்றம் மீது கல்வீச்சு நடத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இக்குழுவானது இராணுவத்துடன் தொடர்புடைய ஒட்டுக்குழுவாகும். இந்தக் குழுவே அடாவடிகளை மேற்கொண்டது.
ஆனாலும் ஆசிரியர்களும் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டனர். வரலாற்றில் இதுவரையில் எந்தவொரு தமிழரும் நீதிமன்றங்களின் மீது கல்வீச்சு நடத்தி தாக்குதல் மேற்கொண்டது கிடையாது. வித்தியாவின் படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்களை இன்று சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. எனவே வித்தியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
எனினும் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கொழும்புக்கு மாற்றுவதற்கும் யாழப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள இவ்விசாரணையை கொழும்புக்கு மாற்றுவதற்கும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு இடம்பெறுமானால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வழிவகுக்கும்.
எனவே மனித நேயம் படைத்த சகலரும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுடன் மேற்படி சம்பந்தப்பட்டோரை யாழ்ப்பாணத்திலேயே தடுத்து வைத்து வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணத்திலேயே மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் எவ்வாறு வெள்ளவத்தைக்கு வர முடியும் என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இனிமேலும் இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.