நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சல்மான்கான்!
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து வழக்கில் பெயிலில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான் நேற்று, மும்பை உயர் நீதிமன்றத்தில் துபாய் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மே 6-ம் தேதி சல்மான் கானுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 48 மணி நேர இடைக்கால பெயில் வழங்கப்பட்டது.
இறுதியாக மே 8-ம் தேதி பெயில் கிடைத்தது. இருப்பினும் அவரை பிணையில் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்தியாவை விட்டு வெளியேறினால் நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுருத்தியிருந்தது. இந்நிலையில், துபாயில் வருகிற 29-ம் தேதி பாலிவுட் நடிகர்களுக்கான 2015-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதில் ஜாமினில் வெளிவந்திருக்கும் பாலிவுட் ஹீரோ சல்மான் கானும் கலந்துகொள்வார் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பயணத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.