Breaking News

மஹிந்த தலை­மையில் மூன்­றா­வ­து அணி! பொதுத் தேர்­தலில் கள­மி­றக்­கு­வது குறித்து தீவிர ஆலோ­ச­னை

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக்ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி­யி­னைக் கள­மி­றக்கும் முயற்­சிகள் துரித கதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­ற­து.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பெரு­ம­ள­வான பாரா­ளு­மன்­ற உறுப்­பி­னர்­களை மஹிந்த கூட்­ட­ணி­யுடன் இணைத்­துக் கொள்­ளவும் தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பல­மான கூட்­ட­ணி­யாக கள­மி­றங்கும் நோக்கில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன் ­ன­ணி­யின் பங்­காளிக் கட்­சிகளின் தலை­வர்­கள் கடந்த தினங்­களில் ஜனா

தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப க்ஷ ஆகி­யோ­ரு­ட­னான விசேட சந்­திப்­புக்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த நிலையில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதான வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­திரி பால­ சி­றி­சே­ன உடன்­ப­டாத நிலையில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை மஹிந்த கூட்­டணி மேற்­கொண்டு வரு­கின்­றது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களில் பெரும்­பான்­மை­யான கூட்டுக் கட்­சிகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை ஆத­ரித்து வரும் நிலையில் அவர்­களின் தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் பல­ரையும் ஒன்­றி­ணைத்து மூன்­றா­வது அணி­யாக பொதுத் தேர்­தலில் கள­மி­றங்கும் முயற்­சி­கள் மேற்கொள்ளப்­பட்­டு வரு­கின்­றன.

நேற்று முன்­தினம் அப­ய­ராம விகா­ரையில் முன்னாள் ஜான­தி­பதி மஹிந்­த ராஜ­பக்­ஷ­வை சந்­தித்­தி­ருந்த நிலையில் மஹிந்த கூட்­டணி இந்த முயற்­சிக்­கான திட்­டங்­களை வகுத்­துள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பங்­காளிக் கட்­சிகளின் தலை­வர்­க­ளி­டம் கருத்­து கேட்­ட­போது அவர்­களும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­னர்.

வாசு­தேவ நாண­யக்­கார. இது தொடர்பில் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலைவர் வாசு­தேவ நாண­யக்­கார கூறு­கையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையை பலப்­ப­டுத்­தவே நாம் ஏனைய பங்­காளிக் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்தோம். அதேபோல் மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆட்­சியை கொண்­டு­வர வேண்­டு­மென்­பதே எம் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஏனைய தலை­வர்­களை ஒன்­றி­ணைத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் எமது கூட்­ட­ணியை ஒன்­றி­ணைக்க வேண்டும். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை ஒன்­றி­ணைக்க முயற்­சிக்­க­வில்லை. மாறாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியை பலப்­ப­டுத்த முயற்­சிக்­கின்றார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த கூட்­டணி மற்றும் மைத்­திரி கூட்­ட­ணி­யாக இவர்கள் செயற்­பட்­டாலும் தற்­போது இரு­வ­ருமே ஒரே கட்­சியின் முக்­கிய நபர்­க­ளா­கவே உள்­ளனர். ஆகவே இரு­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு கட்­சியை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை எமக்கு உள்­ளது. அதை ஜனா­தி­ப­தியும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

மேலும் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க மஹிந்த தான் தகு­தி­யான வேட்­பாளர். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு 57 இலட்சம் வாக்­குகள் கிடைத்­துள்­ளதை ஜனா­தி­பதி மறந்­து­விடக் கூடாது.

பெரும்­பான்மை மக்கள் இன்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஆத­ரிக்­கின்­றனர். ஆயிரக் கணக்­கி­லான மக்கள் அவரை சென்று பார்க்­கின்­றனர். அவ­ருக்­காக நாம் ஏற்­பாடு செய்­துள்ள மக்கள் கூட்­டங்­களை வந்து பார்த்தால் உண்மை என்­ன­வென்­பது தெரியும். இன்று மக்கள் வரம் இல்­லாத ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­மா­ராக உள்ளார். ஆட்சி செய்ய தகுதி இல்­லாத ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தை நடத்­து­கின்­றது. மக்கள் இந்த அர­சாங்­கத்தை ஆத­ரிக்­க­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே மட்­டுமே கடந்த தேர்­தலில் மக்கள் ஆத­ரித்­தனர். எனவே மக்கள் விரும்பும் அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்த ராஜபக் ஷவை கள­மி­றக்­கு­வதே எம் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும். அதற்கு ஜனா­தி­பதி இடம் கொடுக்க வேண்டும். அப்­படி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்­தவை கள­மி­றக்­கா­விடின் வேறு தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­படும் என்­றார்.

திஸ்ஸ விதா­ரண

லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலைவர் திஸ்ஸ விதா­ரண இது குறித்து கருத்து தெரி­விக்­கையில், எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜபக் ஷவை கள­மி­றக்­கு­வது தொடர்பில் நாம் ஜனா­தி­ப­திக்கு தெரி­வித்த போதிலும் ஜனா­தி­பதி, மஹிந்த ராஜபக் ஷவை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் கள­மி­றக்க விரும்­ப­வில்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியை பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் மஹிந்த மீண்டும் கட்­சியில் முக்­கிய பங்­கினை வகிக்க வேண்டும். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்கு இணக்கம் தெரி­விக்­கா­விடின் மூன்­றா­வது கட்­சி­யாக கள­மி­றங்­குவோம். மஹிந்­தவின் தலை­மையில் கீழ் பலர் கைகோர்க்க தயா­ரா­கவே உள்­ளனர். எனவே மூன்­றா­வது கட்­சியும் சாத்­தி­ய­மா­னதே என்­பதை அனை­வரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும் என்று குறிப்­பிட்டார்.