Breaking News

தேர்தல் முறை குறித்து இன்று இறுதித் தீர்மானம்

தேர்தல் முறை மாற்ற விட­யத்தில் எவ்­வா­றான புதிய தேர்தல் முறைக்கு செல்­வது என்­பது தொடர்பில் இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முடி­வெ­டுக்­கப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமை­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டுள்ள தேர்தல் மாதி­ரி­யுடன் புதன்­கி­ழமை நண்­பகல் 12 மணி­வரை கிடைக்­க­வுள்ள அர­சியல் கட்­சி­களின் யோச­னை­க­ளையும் ஆராய்ந்து புதிய தேர் தல் முறையை அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தீர்­மா­னிக்­க­வுள் ளோம் என்றும் அமைச்சர் குறிப்­பிட் டார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கேச­ரிக்கு தகவல் வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். அமைச்சர் ராஜித சேனா­ரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

தேர்தல் முறை மாற்றம் தொடர் பில் சகல அர­சியல் கட்­சி­க­ளி­டமும் இன்று (புதன்­கி­ழமை) நண்­ப­க­லுக்கு முன்­பதாக யோசனை­களை சமர்­ப் பிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. அந்­த­ வ­கையில் தேர்தல் முறை மாற்றம் குறித்த கட்­சி­களின் யோச­னைகள் கிடைத்­ததும் அவற்­றைக்­கொண்டு எவ்­வா­றான தேர்தல் முறைக்கு செல்­வது என்­பது குறித்து தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வுள்ளோம். அதாவது எவ்­வா­றான மற்றும் என்ன கட்­ட­ மைப்பைக் கொண்ட தேர்தல் முறைக்கு செல்­வது என்­பது குறித்து அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தீர்­மா­னித்­து­வி­டுவோம்.

அதன் பின்னர் தேர்தல் முறைமை தயா­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­படும். தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைத்­து­விட்டே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலை நாங்கள் நடத்­துவோம். அந்த செயற்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்லை. இந்த செயற்­பாட்டை நாங்கள் நிச்­ச­ய­மாக செய்து முடிப்போம் என்றார்.

புதிய தேர்தல் முறை தொடர்பில் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னைக்கு மேலும் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என சில வாரங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே இன்று புதன்­கி­ழமை பகல் வரை அர­சியல் கட்­சி­களின் யோச­னை­களை பெறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில் இன்று நண்­பகல் வரை கிடைக்­கப்­பெறும் அர­சியல் கட்­சி­களின் யோச­னை­க­ளைக்­கொண்டு இறுதி வரைபை தயா­ரித்து பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

தற்­போது இரண்டு முறை­மைகள் குறித்து பரி­சீ­லிக்­க­ப­பட்டு வரு­கின்­றது. முத­லா­வது யோசனை மாதி­ரி­யா­னது 196 உறுப்­பி­னர்­களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்­யவும் 59 உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டியல் ரீதியில் தெரிவு செய்யும் வகை­யிலும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது விருப்பு வாக்கு முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­கின்ற அதே­வேளை விகி­தா­சார முறைமை நீக்­கப்­ப­டாத முறை­யாக இது காணப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் தற்­போது 225 ஆக இருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 255 ஆக உயர்த்­து­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது

இதே­வேளை மற்­று­மொரு தேர்தல் முறை­மையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது தேர்தல் தொகு­தி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் 165 உறுப்­பி­னர்கள், விகி­தா­சார முறை­மையின் பிர­காரம் 90 உறுப்­பி­னர்கள் என்று பகிர்ந்து செல்­லும்­படி 255 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. விகி­தா­சார முறைப்­படி தெரிவு செய்­யப்­படும் 90 உறுப்­பி­னர்­களை பொறுத்­த­மட்டில் 66 உறுப்­பி­னர்கள் மாவட்ட ரீதி­யிலும் 24 உறுப்­பி­னர்கள் தேசிய பட்­டியல் ரீதி­யிலும் தெரிவு செய்­யப்­படும் வகையில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் முத­லா­வது முறைப்­ப­டியே தேர்தல் முறையை மாற்றி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. காரணம் இந்த முறை­மையின் ஊடாக தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் அர­சியல் கட்­சி­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற பிர­தி­நி­தித்­து­வங்­க­ளை­யொத்த பிர­தி­நி­தித்­து­வங்­களே புதிய பாரா­ளு­மன்­றத்­திலும் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் சிறு­பான்மை கட்­சிகள் தேர்தல் முறை மாற்றம் மற்றும் அதனால் ஏற்­படும் பாதிப்­புக்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்­து­வ­ரு­கின்­றன. அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நட­த­தி­யி­ருந்த சிறு­பான்மை மற்றும் சிறு அர­சியல் கட்­சிகள் தேர்தல் முறை மாற்ற விட­யத்தில் தமது பிரச்­சி­னையை விளக்­கி­யி­ருந்­தன. இதன்­போது எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லா­னது தற்­போ­தைய விகி­தா­சார முறை­யி­லேயே நடை­பெறும் என்று ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் தேர்தல் முறையை மாற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை தற்­போது மேற்­கொள்ள முடியும் என்றும் எனினும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லா­னது தற்­போ­தைய தேர்தல் முறை­மையின் அடிப்­ப­டை­யி­லேயே நடை­பெ­ற­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன.

ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்­தைக்­கொண்­டுள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது தேர்தல் முறை மாற்றம் உள்­ள­டங்­கி­யுள்ள 100 நாள் திட்டம் முழு­மை­ய­டை­யாமல் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க இட­ம­ளிக்­க­மாட்டோம் என்று வலியுறுத்திவருகின்றது. இதேவேளை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நேற்று முன்தினம் பிரதி வெிளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகையில்

தேர்தல் முறைமையில் பிரதான இரு கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படாவிடின் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். அதேபோல் சிறுபான்மை கட்சிகளின் தீர்மானத்திலும் அதிக அக்கறை செலுத்தப்படும். இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசியப்பட்டியலில் தெரிவாவோரில் 50வீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.