Breaking News

தேர்தலின் பின்னர் ரணில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர தயாராக வேண்டும்

பொதுத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. அடுத்த அர­சாங்கம் ஐக்­கிய மக்கள் தேசியக் கூட்­ட­ணியின் தனித்த அர­சாங்­க­மா­கவே உரு­வாகும். மீண்டும் ரணில் எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அமர்­வ­தற்கு தயா­ராக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் பொதுச்செய­லாளர் அனுரபிரி­ய­தர்­ஷன யாப்பா தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே உண்­மை­யான சர்­வா­தி­காரி. மக்­களின் ஆத­ர­வில்­லாது சர்­வா­தி­கார ஆட்­சியை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தி தமக்கு சவால் விடுக்க முடி­யாத கட்­சி­யாக மாற்­றி­ய­மைக்க ஐக்­கிய தேசியக் கட்சி

முயற்­சிக்­கின்­ற­னது. ஆனால் அவர்­களின் கனவு ஒரு­போதும் நிறை­வே­றப்­போ­வ­தில்லை. யார் என்ன முயற்­சிகள் மேற்­கொண்­டாலும் நாம் பல­மா­ன­தொரு கட்­சி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம். அடுத்த பொதுத் தேர்­தலில் கூட்டு அர­சாங்கம் என்ற பேச்­சுக்கே இடம் இல்லை. பொதுத் தேர்­தலின் பின்னர் எமது தனி அர­சாங்கம் அமையும். அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோரை ஒன்­றி­ணைத்து எமது கூட்டுக் கட்­சி­களின் உத­வி­யுடன் நாம் மீண்டும் மக்கள் ஆட்­சியை உரு­வாக்­குவோம். நாம் கடந்த காலங்­களில் ஒரு­சில தவ­றுகள் விட்­டி­ருந்தோம். எனவே நாம் செய்த தவ­று­களை திருத்­திக்­கொண்டு மக்கள் விருப்பும் ஜன­நா­யக ஆட்­சியை ஏற்­ப­டுத்­துவோம்.

மேலும் மத்­திய வங்கி ஆளு­நரின் நிதி மோச­டிகள் தொடர்பில் நாம் பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக கேள்­வி­களை எழுப்­பி­வந்த நிலையில் பிர­தமர் அவற்றை மழுப்பும் பதில்­க­ளி­னூ­டாக சமா­ளித்து வரு­கின்றார். ஆனால் நம் இந்த விட­யத்தை விடப்­போ­வ­தில்லை. எமது ஆட்­சியில் ஜன­நா­யகம் இல்லை என்ற குற்­றச்­சாட்­டுகள் பல­வற்றை முன்­வைத்தே புதிய ஆட்சியை அமைத்­தனர்.

ஆனால் இந்த ஆட்­சியில் மிகவும் மோச­மான செயற்­பா­டுகள் இடம்பெறுகின்றன. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே உண்­மை­யான சர்­வா­தி­காரி. தமது சுய­ந­லத்­துக்­காக சுயா­தீன சேவைகள் அனைத்தும் முடக்­கப்­ப­டு­கின்­றன. நாட்டில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் அதி­க­ரித்து விட்­டன. மக்­க­ளுக்கு நோய்­க­ளையும் தீங்­கு­க­ளையும் ஏற்­ப­டுத்தும் உண­வுகள், மருந்­துகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் கேள்வி எழுப்பும் நபர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். பதவி விலக்­கப்­ப­டு­கின்­றனர். உண்­மை­யான சர்­வா­தி­கார பாசிச அர­சாங்கம் இன்று ஆட்­சியில் உள்­ளது. விலை குறைப்பு செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தனர், சட்டம் நிலை­நாட்­டப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தனர், ஆனால் இவர்கள் கூறிய எதுவும் நடை­பெ­ற­வில்லை. இவர்­களின் நூறுநாள் வேலைத்­திட்டம் வெறும் கண்­ து­டைப்பு மட்­டு­மே­யாகும்.

இந்த அர­சாங்கம் எமது ஜனா­தி­ப­தியை பச்சை நிற­மாக்­கி­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் புகைப்­ப­டத்­தையும் அவ­ரது பெய­ரையும் வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி இல்­லாமல் தனித்து செயற்­பட முடி­யாது என்­பதை நிரூ­பித்து வரு­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மக்கள் பலத்­துடன் ஆட்சி அமைத்­தி­ருந்தால் மக்கள் விருப்பம் என்­ன­வென்­பது தெரிந்­தி­ருக்கும். ஆனால் மக்கள் பலம் இல்­லாது சட்­டத்­துக்கு முர­ணான வகையில் ஆட்­சிக்கு வந்­த­வர்­க­ளுக்கு ஆட்­சியை எப்­படி கொண்டு நடத்­து­வது என்­பது தெரி­யாது. எனவே இன்னும் சிறிது காலமே ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி இருக்கும். அதற்குப் பின்னர் மீண்டும் ரணில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக செயற்­ப­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும். அவ­ருக்­கான எதிர்க்­கட்சி ஆச­னத்தை தயார்­ப­டுத்­த­வேண்­டிய நேரம் நெருங்கி விட்­டது.

ரணிலின் ஆட்­சியில் நாடு மிகவும் பயங்­க­ர­மா­ன­தொரு பாதையில் பயணித்துக்கொண்டு செல்கின்றது. பயங்கரவதத்தையும் பிரிவினைவாததையும் மீண்டும் பலப்படுத்தும் வகையில் இந்த ஆட்சியை கொண்டு செல்கின்றனர். இது நீடித்தால் இன்று நடக்கும் அசம்பாவிதங்கள் முழு நாட்டிலும் பரவி மக்களை அழித்துவிடும். நாட்டின் அமைதியும் கெட்டுவிடும். எனவே இந்த ஆட்சியை வெகு விரைவில் விரட்டியடிக்க நாம் தயாராகிவிட்டோம் என குறிப்பிட்டார்.