உயிரிழந்த பொது மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி - விஜயகலா உறுதி
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்காக அஞ்சலி செய்வதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் இந்நாளாகும் என்றும் அவர் கூறினார். முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க. பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்ற வட மாகாணத்தின் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்காலில் இறந்த எமது மக்களுக்கான அஞ்சலியை ஈகச் சுடரேற்றி செலுத்தியுள்ளோம். எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். எந்தவிதமான காரணங்களுமின்றி கொலைசெய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலு த்துவதற்குக் கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமே இந்நாளாகும் என்றார்.