Breaking News

சென்­னையில் முதல்­மு­றை­யாக களம் இறங்­கு­கிறார் ஜெ!

சென்னை டாக்டர் ராதா­கி­ருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெற்­றி வேல் தனது பத­வியை நேற்று திடீ­ரென இராஜி­னாமா செய்தார். அவ ரது இராஜி­னா­மாவை பேரவைத் தலைவர் உட­ன­டி­யாக ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செய­லாளர் ஜெயல­லிதா போட்­டி­யி­டு­வ­தற்­கா­கவே வெற்றிவேல் இராஜி­னாமா செய்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஜெய­ல­லிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த செப்­ரெம் பர் 27ஆ-ம் திகதி பெங்­க­ளூர் சிறப்பு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. ஜெயல­லிதா, சசி­கலா உள்­ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தண்­டனை பெற்ற கார­ணத்தால் முதல்வர் பத­வி­யையும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் பத­வி­யையும் ஜெய­லலிதா இழந்தார். அதைத் தொடர்ந்து செப் டெம்பர் 29-ஆம் திகதி ஓ.பன்­னீர்­செல்வம் முதல்­வ­ராக பத­வி­யேற்றார்.

இதற்­கி­டையே, தண்­ட­னையை எதிர்த்து கர்­நா­டக உயர் நீதி­மன்றத் தில் ஜெய­ல­லிதா மேன்­மு­றை­யீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த 11-ஆம் திகதி தீர்ப்­ப­ளித்த நீதி­பதி குமா­ர­சாமி, ஜெய­ல­லிதா உள்­ளிட்ட 4 பேரையும் விடு­தலை செய்து உத்­த­ர­விட்டார். வழக்கில் இருந்து விடு­விக்­கப்­பட்­டதால் முதல்வர் பத­வியை ஏற்­பதில் ஜெய­ல­லி­தா­வுக்கு இருந்த சட்­ட­ரீ­தி­யான தடை நீங்­கி­யது. அத னால், அவர் மீண்டும் முதல்வராக பத­வி­யேற்­ப­தற்­கான நடவடிக்­கைகள் தொடங்­கி­யுள்­ளன.

அ.தி­.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்­னையில் உள்ள கட்சித் தலைமை அலு­வ­ல­கத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு நடை­பெறும் என்று அறி­விக்கப்பட்­டுள்­ளது. அந்தக் கூட்­டத்தில், கட்­சியின் சட்­டப்­பே­ரவைத் தலை­வ­ராக ஜெய­ல­லிதா ஒரு­ம­ன­தாக தெரிவு செய்­யப்­ப­டுவார். இதை­ய­டுத்து, முதல்வர் பத­வியை ஓ.பன்­னீர்­செல்வம் இராஜி­னாமா செய் வார் என்றும், 22 அல்­லது 23 ஆம் திகதி ஜெய­ல­லிதா பத­வி­யேற்பார் என் றும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

சட்டமன்ற உறுப்பினராக இல்­லாத நிலையில் முதல்­வ­ராக பத­வி­யேற்கும் ஜெய­ல­லிதா, 6 மாதத்­துக்குள் ஏதா­வது ஒருதொகு­தியில் போட்டியிட்டு வெற்றி பெற­வேண்டும். ஜெய­லலிதா போட்­டி­யி­டு­வ­தற்கு வச­தி­யாக தங்கள் பத­வியை இராஜி­னாமா செய்யத் தயா­ராக இருப்­ப­தாக பல சட்டமன்ற உறுப்பினர்க்கள் அறி­வித்­தனர். அ.தி­.மு.­க.வில் மட்­டு­மின்றி, அதி­ருப்தி தே.மு.­தி.க சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்­த­ர­ராஜன், அருண் சுப்­பி­ர­ம­ணியம், திருச்­செந்தூர் தொகுதி தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதா­கி­ருஷ்ணன், அணைக்­கட்டு தொகுதி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கலை­ய­ரசன் ஆகி­யோரும் அவ்­வாறு அறி­வித்­தனர். அதனால், ஜெய­ல­லிதா எந்தத் தொகு­தியில் போட்­டி­யி­டுவார் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்டுள்ளது. அவர் சென்னையில் போட்­டி­யிடப் போவ­தா­கவும் தக­வல்கள் வந்துள்ளன.