Breaking News

யாழ், நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 33 பேருக்கு பிணை

யாழ், நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் கடும் எச்சரிக்கையின் பின் தலா இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் மாதத்தின் இறுதி ஞாயிறு காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் இனி இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டால் பிணை இரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்பதால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.