Breaking News

யுத்தக் குற்­றச்­செயல் விசா­ர­ணைகள் குறித்து அனைத்து தரப்­பி­ன­ரது கருத்­துக்­க­ளையும் கேட்­க­வேண்டும்

யுத்தக் குற்றச் செயல் விசா­ர­ணைகள் தொடர்பில் அனைத்து தரப்­பி­ன­ரது கருத்­துக்­க­ளையும் அர­சாங்கம் கேட்­ட­றிந்­து­கொள்ள வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அனைத்து அர­சியல் கட்­சிகள் மற்றும் ஏனைய தரப்­பி­ன­ருடன் விரி­வாக பேசி விசா­ர­ணைகள் குறித்த தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செய­லாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்­சாளர் பர்ஹான் ஹக் தெரி­வித்­துள் ளார்.

அண்­மையில் ஐக்­கிய நாடு கள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் செயிட் அல்ஹூஸைனும் இதே­வி­த­மான கரு த்தை வெளி­யிட்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்கம் அனைத்துத் தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மா­னது என பர்ஹான் ஹக் தெரி­வித்­துள்ளார். அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புக்கள், சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்கள் உள்­ளிட்­ட­வர்­க­ளிடம் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொள்ள வேண்­டு­மென அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

குற்றச் செயல்­க­ளுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் வெளிப்­ப­டை­யா­னதும் நம்­ப­க­மா­ன­து­மான பக்­கச்­சார்­பற்ற விசா­ரணைப் பொறி­மு­றைமை ஒன்றை உரு­வாக்கும் இலங்கை அர­சாங்­கத்தின் முயற்­ சிக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முழு அள வில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும், இலங்கையுடன் தொடர்ந் தும் தொடர்புகளைப் பேணும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.