Breaking News

கோத்தாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை! 58 பேர் பாது­காப்புக் கட­மையில் என்­கி­றது அரசாங்­கம்

முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக் ­ஷவின் உயி­ருக்கு எந்­த­வி­த­மான அச்­சு­றுத்தலும் இல்லை. கோத்­த­பா­யவின் பாது­காப்பு தொடர்­பான பொறுப்பை அர­சாங்­க­­மே ஏற்­றுக்கொண்­டுள்­ள­து. அவரின் பாது­காப்­புக்­காக 58 பேர் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளனர் என்றும் அர­சாங்­கம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தது.

பா­ரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற அமர்வின்போது வாய்­மூல விடைக்­கான கேள்­வி நேரத்தில் எதிர்க்­கட்சி உறுப்பினர் சுசந்த புஞ்­சி­நி­லமே எழுப்­பிய கேள்­விக்கு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்சு சபையில் சமர்ப்­பித்த பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டிருந்­தது.

சுசந்த புஞ்சிநிலமே எம்.பி. தனது கேள்­வியில்,

முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளர்­களில் தற்­போது அதிக உயிர் அச்­சு­றுத்­த­லுள்ள செய­லாளர் யார் என்­ப­தையும், முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டதன் பின்னர் வழங்­கப்­பட்­டுள்ள பாது­கா­வ­லர்­களின் எண்­ணிக்கை யாது? தற்­போது இப்­பா­து­கா­வ­லர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­பட்­டுள்­ளதா? ஆம் எனில், தற்­போ­துள்ள பாது­கா­வ­லர்­களின் எண்­ணிக்கை எவ்­வ­ள­வு? நிலவும் உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு ஏற்­ற­வாறு கோத்­த­பா­ய­வுக்கு போதி­ய­ளவு பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளதா? அவரின் பாது­காப்பு தொடர்­பான பொறுப்பை அரசு ஏற்­றுக்­கொள்­கி­றதா? என்றும் கேட்­டி­ருந்தார்.

இந்தக் கேள்­விக்கு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்சு சபையில் சமர்ப்­பித்த பதிலில்,

முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளர்­களின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் எதுவும் இல்லை. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவின் பாது­காப்­புக்­காக 50 படை வீரர்­களும், 8 இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவரின் பாது காப்புக்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவிக் கப்பட்டிருந்­த­து.