Breaking News

லஞ்ச,ஊழல் தடுப்பு பிரிவு மகிந்தவுக்கு அழைப்பாணை?

மகிந்தராஜபக்ஷவுக்கு மீண்டும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவரை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த போது, அவருக்கு ஆதரவான தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர்.சிலர் நாடாளுமன்றத்தில் தங்கி இருந்து போராட்டத்தை நடத்தினார்கள்.இதனை அடுத்து மகிந்தவிடம் விசாரணை நடத்தப்படவில்லை. 

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், ஆர்ப்பாட்டங்களின் காரணமாக மகிந்தவிடம் விசாரணை செய்வது நிறுத்தப்படவில்லைஎன்றும், கடந்த மாதம் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசாங்க விடுமுறைகளின் காரணமாகவே இந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும்,அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.