மைத்திரி - ரணில் அரசாங்கம் அல்ல, மைத்திரி - மஹிந்த அரசாங்கமே தேவை
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மாத்தறையில் இடம்பெரும் பேரணியில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை விட அதிக எண்ணிக்கையிலானோர் இம்முறை பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை வெற்றி பெறச் செய்யத் தேவையானது மைத்திரி - ரணில் அரசாங்கம் அல்ல எனவும், மைத்திரி - மஹிந்த அரசாங்கமே எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும் எனக் கோரி, மாத்தறையில் இன்று இடம்பெரும் பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.