Breaking News

சிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையால் நாட்டை பிளவுபடுத்த முடியாது! என்கிறார் சம்பிக்க

நாட்டில் வாழும் சிறிய குழு­வி­னரின் சமஷ்டி கோரிக்­கையின் கார­ண­மாக நாட்டை ஒரு­போதும் பிள­வு­ப­டுத்த முடி­யாது. 





இனிமேல் பயங்­க­ர­வா­தத்­திற்கும் பிரி­வி­னை­வா­தத்­திற்கும் இட­மில்லை என மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்­சரும் ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

சர்­வ­தே­சத்­திடம் இலங்­கையை பலிகொ­டுத்த மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் எமது இரா­ணு­வத்தை காப்­பாற்ற முடி­யாது. புதிய ஆட்­சியின் கீழ் சர்­வ­தே­சத்தில் உரிய பதி­ல­ளிக்கும் பொறி­மு­றையை மைத்­தி­ரி-­ – ரணில் உற­வி­னா­லான அரசு ஆரம்­பிக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்ற தேர்­தலை முன்­னிட்டு கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ளரும், பொரளை தொகுதி அமைப்­பா­ள­ரு­மான ஜயந்த டி சில்­வாவின் ஏற்­பாட்டில் நேற்று மாலை பொரளை சந்­தியில் இடம்­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மேலும் அங்கு உரை நிகழ்த்­து­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் இரண்டு கார­ணங்­களை மைய­மாக கொண்டு பிர­தமர் கதி­ரையில் அமர முடி­யாது. இதற்­க­மைய மஹிந்­த­விற்­காக கோஷ­மிடக் கூடி­ய­வர்கள் ஒன்றை மாத்­திரம் புரிந்து கொள்ள வேண்டும். அர­சி­ய­ல­மைப்­பினை நன்கு ஆராய்­ந்து தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தின் பிர­த­மரை ஜனா­தி­ப­தியே நிய­மிக்க வேண்டும். அவரின் பரிந்­து­ரைக்கு பாத்­தி­ர­மா­ன­வரே நாட்டின் பிர­த­ம­ராக முடியும். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எந்த காரணம் கொண்டு பிர­தமர் பத­வியை வழங்­கப்­போ­வ­தில்லை என்றும், அவர் தேர்­தலில் தோல்வி காண்பார் என்றும் தெட்ட தெளிவாக நாட்டு மக்­க­ளுக்கு தனது உரையின் போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான தொரு தரு­ணத்தில் மஹிந்­தவின் பிர­தமர் கனவு ஒரு­போதும் பலிக்­காது. அதே­போன்று பாரா­ளு­மன்­றத்தின் பிர­த­ம­ரா­கு­வ­தற்கு மக்­களின் ஆணை மஹிந்­த­விற்கு கிடைக்க வேண்டும். இத்­த­கைய நிலையில் நாட்டில் எக்­கா­ரணம் கொண்டும் மக்­களின் பணங்­களை கொள்­ளை­ய­டித்த முன்னாள் ஜனா­தி­ப­திக்கு மக்­களின் ஆணை ஒரு­போதும் கிடைக்கப் பெறாது.

ஆகையால் மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு கார­ணங்­களை கருத்திற் கொண்டு மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் பிர­தமர் கதி­ரையில் அமர்­வ­தனை நினைத்துக் கூட பார்க்க முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் நஷ்­டத்தில் இயங்­கிய அரச நிறு­வ­னங்­களை உரிய திட்­ட­மி­ட­லுடன் சரி­யான பாதைக்கு கொண்டு வந்­த­தது மாத்­தி­ர­மின்றி, இலாபம் ஈட்டு நிறு­வ­ன­மா­கவும் மாற்­றி­யுள்ளோம்.

எனினும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டை பொறுப்­பேற்றால் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்தி விடுவார் என்றும் நாட்டை இரண்­டாக பிள­வு­ப­டுத்தி விடுவார் என்றும் மஹிந்த அணி­யினர் பொய்­யான பீதியை நாட்டு மக்­க­ளிடம் பரப்பி வரு­கின்­றனர். ஆகவே இந்த விட­யத்தில் மக்கள் எக்­கா­ரணம் கொண்டும் பீதி அடையத் தேவை­யில்லை.

நாட்­டிற்கு துரோகம் இழைக்கும் வகையில் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பினை முன்­னெ­டுத்து திறை­சேரி நிதி­யி­லி­ருந்து புலி­க­ளுக்கு இலஞ்சம் வழங்­கியவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வாவார். எவரை கொன்று குவித்­தாலும் கவ­லை­யில்லை. தன்­னு­டைய குடும்­பத்­த­வர்கள் எவ­ரையும் கொலை செய்ய கூடாது என்ற உடன்­ப­டிக்­கையின் பிர­கா­ரமே அவர் திறை­சேரி நிதியை விடு­தலைப் புலி­க­ளுக்கு வழங்­கினார்.

பயங்­க­ர­வாத யுத்­தத்தை நிறைவு செய்­வ­தற்கு நாமே அழுத்தம் பிர­யோ­கிக்கும் சக்­தி­யாக விளங்­கினோம். இந்­நி­லையில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு யுத்­தத்தை நிறைவு செய்யும் நோக்கம் ஒரு­போதும் இருந்­த­தில்லை.

இந்­நி­லையில் நாட்டை பிள­வுப்­ப­டுத்­து­வ­தற்கோ அல்­லது பயங்­க­ர­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கோ இனிமேல் இட­ம­ளிக்க போவ­தில்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் உறு­தி­பட தெரி­வித்­துள்­ளனர். அதே­போன்று மஹிந்த ராஜ­ப­க் ஷவும் அதனை வழி­மொ­ழிந்­துள்ளார். இந்­நி­லையில் நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் நோக்கம் எவ­ரு­டைய சிந்­த­னை­யிலும் இல்லை. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

பிரி­வி­னை­வா­தத்­திற்கு இனிமேல் ஒரு­போதும் இட­மில்லை. நாட்டில் ஒரு சில­குழு மாத்­திரம் சமஷ்­டியை கோரி நிற்­ப­தனால் நாட்டை பிள­வுப்­ப­டுத்த முடி­யாது. குறித்த குழுக்­க­ளினால் நீண்­ட­கா­ல­மாக குறித்த கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதனால் நாடு பிள­வ­டையும் என்று ஒரு­போதும் கூற­மு­டி­யாது. அதற்கு நாம் இட­ம­ளிக்க போவ­து­மில்லை.

அதே­போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் திறனற்ற கொள்கையின் காரணமாக தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அவரினால் சர்வதேசத்திடமிருந்து நாட்டிற்காக உழைத்த இராணுவ வீரர்களை காப்பாற்ற முடியாமல் போனது. ஆனால் மைத்திரி-–ரணில் உறவினூடாக சர்வதேசத்திடமிருந்து நாட்டையும் இராணுவத்தையும் நாம் காப்பாற்றுவோம். சர்வதேசத் து டன் உறவினை பலப்படுத்தி உரிய பதிலை நாம் வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார்.