Breaking News

தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையும் கூறுவது மடமை(காணொளி)

அண்மையில் பிரித்தானியா வந்திருந்த வடமாகாண
முதலமைச்சர் திரு க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் பித்தானிய தமிழ் வானொலி ஒன்றுக்கு நேர்காணலையும் சர்வதேச தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தில் சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.

அங்கு உரையாற்றிய விக்கினேஸ்வரன் தற்போதைய தாயக அரசியல் நிலை தொடர்பாகவும் தமிழ் தலமைகளின் அரசியல் போக்கு தொடர்பிலும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களுக்கு ஒன்றையும் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் சொல்லுவது இரு இன மக்களையும் ஏமாற்றுவது போலாகும் என்றும் அதனை இரு பக்க அரசியல் தலைவர்களும் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

அவருடைய முழுமையான நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.(இணைய வேகம் குறைந்தவர்கள் 23ஆவது நிமிடத்திலிருந்து 2 நிமிடம் குறித்த பகுதியை கேட்கலாம்)




 சிறப்புரை பகுதி 1