Breaking News

ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்பு இல்லை - வாசு

ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள பஞ்ச கொள்கை விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒருவார்த்தையேனும் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை என்று குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும்.ஆனால் அது குறித்து ஒரு வார்த்தையேனும் தெரிவிக்காத ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு நாட்டை பாதுகாக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இளைஞர் முன்னணியின் கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.