Breaking News

அரசியல் தீர்வின் பலன் முஸ்லிம்களுக்கும் - சம்பந்தன் உறுதி

விரைவில் ஏற்படவுள்ள அரசியல் தீர்வின் பலனை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் வாழும் முஸ்லிம்களும் அனுபவிப்பது உறுதி செய்யப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மால் நிறைவேற்றக் கூடிய உறுதிமொழிகளை வழங்க முடியுமே தவிர, நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளை வழங்க மாட்டேன் என்றும் சம்மந்தன் இதன் போது தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து இந்தியாவின் ஊடகம் ஒன்று வரவேறப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.