Breaking News

ராஜபக்ஷ குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன

யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ என்ற தனி­யொரு குடும்­பத்தின் முன்­னேற்­றத்தை அடிப்­ப­டை­யாக வைத்தே அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்னெ­டுக்­கப்­பட்­டன. 

இதற்கு ஜன­வரி 8 ஆம் திகதி முற்­றுப்­புள்ளி வைத்தோம். அந்த பய­ணத்தை தொடர எதிர்­வரும் 17 ஆம் திகதி ஐ.தே.முன்­ன­ணியை வெற்­றி­பெறச் செய்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சிவில் சமூ­கத்தை பலப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­று­வதன் மூலமே மீண்டும் இந்­நாட்டில் குடும்ப ஆட்சி தலை­தூக்­கு­வதை தகர்க்க முடி­யு­மென்றும் பிர­தமர் தெரி­வித்தார். பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்­டலில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஐ.தே.முன்­ன­ணியின் தொழில்சார் நிபு­ணர்­க­ளு­ட­னான சந்­திப்பில் உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

1983 இலும் யுத்தக் காலத்­திலும் நாடு பின்­ன­டைவைக் கண்­டது. மக்கள் கஷ்­டப்­பட்­டனர். ஆனால் இவை­ய­னைத்­திலும் இருந்து மீட்சி பெற்று பொரு­ளா­தா­ர ரீதியாக நாட்டை கட்­டி­யெ­ழுப்­பவும் மக்­களை முன்­னேற்­று­வ­தற்கும் சந்­தர்ப்பம் யுத்தம் முடித்த பின்னர் கிடைத்­தது.

ஆனால் நாட்­டையும் மக்­க­ளையும் பொரு­ளா­தா­ரத்­தையும் அபி­வி­ருத்தி செய்­வதை முழு­மை­யாக கைவிட்ட மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­த­ரர்­க­ளையும் குடும்­பத்­தையும் முன்­னேற்­று­வதை அடிப்­ப­டை­யாக வைத்தே அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்தார். நாட்­டையும் மக்­க­ளையும் நடுத்­தெ­ருவில் கைவிட்டார்.

இதி­லி­ருந்து கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி சிவில் சமூகம் தொழில்சார் நிபு­ணர்கள் உட்­பட பலர் இணைந்து நல்­லாட்­சிக்­கான புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தினோம். அதன் பின்னர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்கி நல்­லாட்­சியை தொடர்ந்தோம். அந்த நல்­லாட்­சியின் இரண்டாம் கட்ட பயணம் எதிர்­வரும் 17 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. அதற்­காக மீண்டும் நாம் இங்கு இன்று ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

60 மாதங்­களில் புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் எமது திட்­டத்­திற்கு தங்­க­ளது ஒத்­து­ழைப்பு மீண்டும் எமக்கு தேவை­யாகும். தெற்­கா­சி­யாவில் முதன்­மு­றை­யாக எமது நாட்டில் சமூக பொரு­ளா­தார சந்தை வாய்ப்பு பொரு­ளா­தார கொள்­கையை எமது திட்­டத்தில் முன்­வைத்­துள்ளோம்.

இக்­கொள்­கை­யோடு புத்தர் போதித்த லெச்­சவி ஆட்சி முறை­யையும் இணைத்து எமது எதிர்­கால ஆட்சி அமையும். நாசி­வா­தத்தின் பின்னர் கிறிஸ்­தவ சக்­தி­களால் இப்­பொ­ரு­ளா­தார முறை உலகில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இன்று தெற்­கா­சி­யாவில் இந்து முஸ்லிம் மதங்­க­ளுக்­குள்ளும் இந்த ஜன­நா­யக மர­பு­க­ளு­ட­னான பொரு­ளா­தாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­த­லுக்கு பின்­ன­ரான பாரா­ளு­மன்றம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாமல் அதனை அனைத்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­று­வதே எமது கொள்­கை­யாகும்.

இதற்­காக கூட்­டுக்­கி­ரா­மங்­களை உரு­வாக்கி சிவில் அமைப்­புக்­களை பலப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். ஆட்­சியை முன்­னெ­டுக்க ஆலோ­ச­னைகள் பெறப்­படும். இதன் மூலமே எதிர்­கா­லத்தில் தனிக்­கு­டும்ப ஆட்­சி நாட்டில் தலை­யெ­டுக்­காது தடுக்க முடியும். அமெ­ரிக்­காவில் இங்­கி­லாந்தில் ஐரோப்­பிய நாடு­களில் எந்­த­வி­த­மான ஆட்சி முறைகள் பின்­பற்­றப்­பட்­டாலும் பல­முள்ள சிவில் சமூகங்களை இதனோடு இணைத்து ஆட்சி முன்னெடுக்கப்படும். சிவில் அமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டிய அதேவேளை திறமையான நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

மகா ராஜாவை சுற்றி சுற்றி வருவதால் ஆட்சியில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்காது என்பது தான் உண்மையாகும் என்றார்.