தோல்வியை ஏற்கவில்லை! டுவிட்டரில் மகிந்த தகவல்
தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்ததாக சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது.
அதனை மேற்கோள்காட்டி எமது இணையத்தளமும் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்னமும் உத்தியோகபூர்வமான இறுதி முடிவு கிடைக்கவில்லை எனவும், இதற்கமைய வெற்றியையோ தோல்வியையோ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் சற்று முன்னர் அறிவித்தார்.








