Breaking News

துறவியாக போகின்றேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா

தான் அரசியலைவிட்டு விலகி துறவியாக ப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


பொது தேர்தலில் தோல்வியடைந்தவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை. அரசியலில் ஈடுபடுவதனை விட துறவியாக செயற்படுவதே மேல்.உங்களுக்கு வேண்டும் என்றால் தலைவரிடம் சென்று இம்முறை எங்களுக்கு நியாயமானதை செய்யுமாறு கூறுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அநுர பிரியதர்ஷன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.