Breaking News

வடக்கு, கிழக்கை இணைக்கும் புலிகளின் வேலைத்திட்டத்தை ரணில் அன்றும் இன்றும் முன்னெடுத்து வருகின்றார்

வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் புலி­களின் வேலைத்­திட்­டத்தை ரணில் அப்­போதும் முன்­னெ­டுத்தார். இப்­போது முன்­னெ­டுக்­கின்றார். 

பிர­பா­கரன் இல்­லா­விட்­டாலும் அவ­ரது இடத்தை பிர­தமர் ரணில் நிரப்­பு­கின்றார் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார். ரணில் மீதுள்ள நம்­பிக்­கையில் தான் சம்­பந்­தனும், சர்­வ­தே­சமும் ரணிலை ஆட்­சிக்கு கொண்­டு­வர முயற்­சித்து வரு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் தொடர்­புகள் குறை­வ­டைந்­தி­ருக்கும் நிலையில் தமிழ் மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் எதிர்க்­கட்சி தலை­வ­ர் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

பிரி­வி­னைக்கு அப்பால் ஒன்­றி­ணைந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒரே எதிர்­பார்ப்­பாகும். கடந்த காலத்தில் எமது செயற்­பா­டுகள் அனைத்தும் அவ்­வாறே அமைந்­தி­ருந்­தது. குறிப்­பாக யுத்­தத்­துக்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் பல வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்தோம். வடக்கில் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்பால் தமிழ், சிங்­கள உற­வு­மு­றையை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். ஆனால் அபி­வி­ருத்­தி­களை செய்ய முடிந்த எம்மால் தமிழ் சிங்­கள உற­வு­மு­றையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் வெற்றி கிடைக்­க­வில்லை. அதற்கு முக்­கிய சில கார­ணங்­களும் உள்­ளன.

அதா­வது யுத்­தத்தின் பின்னர் வடக்கு மக்கள் தமது சாதா­ரண நிலை­மைக்கு வர சில காலம் எடுத்­தமை உண்­மையே. ஆனால் மக்கள் சாதா­ரண நிலை­மைக்கு வரக்­கூ­டிய வகையில் வடக்கின் சூழல் அமைந்­தி­ருக்­க­வில்லை. பொது மக்­களின் காணி­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நீண்­ட­காலம் தேவைப்­பட்­டது. விடு­த­லைப்­பு­லிகள் தமது ஆதிக்­கத்தின் கீழ் வடக்கை வைத்­தி­ருந்த வேளை­யிலும், இறுதிக் கட்ட யுத்­தத்தின் போதும் அவர்­களால் வடக்கில் விதைக்­கப்­பட மிதி­வெ­டிகள் அனைத்­தையும் அகற்­றவே எமக்கு நீண்­ட­காலம் எடுத்­தது. அதேபோல் அப்­ப­குதி மக்­க­ளுக்­கான வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுக்­கவும் காலம் தேவைப்­பட்­டது. இந்தச் செயற்­பா­டு­க­ளினால் எமக்கும் மக்­க­ளுக்கும் இடையில் தொடர்­புகள் சற்று விரி­ச­லாக இருந்­தது.

அதை­வி­டவும் முக்­கி­ய­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட வடக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் அர­சியல் கட்­சி­களும், புலம்­பெயர் அமைப்­பு­களும் தமிழ் மக்­களை பிரி­வி­னை­வா­தத்தின் பக்கம் கொண்­டு­சென்­று­விட்­டனர். சிங்­கள மக்­களை வடக்கில் நெருங்­க­வி­டாத நிலை­மையை உரு­வாக்கி விட்­டனர். ஆகவே எமது ஆட்­சியின் போது நாம் தமிழ் மக்­களை நெருங்­கா­த­மைக்கு இவையே கார­ண­மாகும். 

ஆனால் எமது ஆட்­சியில் எம்மால் இயன்ற அளவு தமிழ் முஸ்லிம் மக்­களை ஆத­ரித்து செயற்­பட்டோம். ஆனால் இப்­போது நிலைமை அவ்­வாறு அமை­ய­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியை நம்பி வாக்­க­ளித்த மக்கள் இன்று ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். நாம் எப்­போதும் தமிழ் மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க தயா­ரா­கவே உள்ளோம். ஆனால் தமிழ் மக்கள் எம்மை ஆத­ரிக்க வேண்டும். ஆனால் நாம் ஆட்­சியை அமைத்­த­வுடன் பிரி­வினை இன்றி அனைத்து மக்­களின் மனங்­க­ளையும் வென்­றெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேலைத்­திட்­டம் எப்­போ­துமே சர்­வ­தே­சத்தை பலப்­ப­டுத்தும் வகையில் தான் அமைந்­துள்­ளது. 2002 இல் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சி­ய­மைத்த வேளை­யிலும் சர்­வ­தேச தேவையை பூர்த்­தி­செய்யும் வகையில் விடு­த­லைப்­பு­லி­களை பலப்­ப­டுத்தும் ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்­டனர். வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் புலி­களின் வேலைத்­திட்­டத்தை ரணில் முன்­னெ­டுத்தார். அதேபோல் இப்­போதும் ஐக்­கி­ய­தே­சியக் கட்சி சர்­வ­தேச எதிர்­பார்ப்பை பூர்த்­தி­செய்யும் வகையில் புலி­களின் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றார். பிர­பா­கரன் இல்­லா­விட்­டாலும் அவ­ரது இடத்தை ரணில் நிரப்­பு­கின்றார். அதன் கார­ணத்­தி­னா­லேயே சம்­பந்­தனும், சர்­வ­தே­சமும் ரணிலை ஆட்­சிக்கு கொண்­டு­வர முயற்­சித்து வரு­கின்­றனர்.

சிங்­கள மக்­களின் பாதி வாக்­கு­களை விடவும் சற்று குறை­வாக ஐக்­கிய தேசியக் கட்சி எடுத்­தாலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் ஆட்­சியை அமைக்க முடியும். அந்த நம்­பிக்­கையில் தான் ஐக்­கிய தேசியக் கட்சி ஏனைய கட்­சி­களை விலைக்கு வாங்கி சிங்­கள வாக்குகளை பலப்படுத்த முயற்சித்து வருகின்றது. குறிப் பாக மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயகக் கட்சிகளின் உதவியுடன் சிங்கள் வாக்குகளை கைப்பற்ற ரணில் திட்டம் தீட்டியுள்ளார். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டு மாயின் சிங்கள மக்கள் அனைவரையும் எம்பக்கம் எடுக்க வேண்டும். அதேபோல் இந்த நாட்டில் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அனைத்தையும் தோற்கடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார் .