Breaking News

17 ஆம் திகதிக்குப் பின்னர் மஹிந்த பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது! தினேஷ் குணவர்த்தன கூறுகிறார்

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெ­று­வது நிச்­ச­ய­மாகும். 

அத்­துடன் எதிர்­வரும் 17 ஆம் திக­திக்கு பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அர­சாங்கம் அமை­வ­தையும் மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ரா­வ­தையும் யாராலும் தடுக்க முடி­யாது என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

எட்­டா­வது பாரா­ளு­­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார செயற்­பா­டுகள் மற்றும் தேர்தல் நிலை­மைகள் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்தல் பிர­சார செயற்­பா­டு­களில் சிறப்­பாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. கிராமப் புறங்­களில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு சிறப்பான ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் எதிர்­வரும் 17 ஆம் திக­திக்கு பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி யின் அர­சாங்கம் அமை­வ­தையும் மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ரா­வ­தையும் யாராலும் தடுக்க முடி­யாது.

அந்­த­வ­கையில் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெ­று­வது நிச்­ச­ய­மாகும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடி­யாது. கடந்த ஆறு மாதங்­களில் மக்கள் பல­ மான வீழ்ச்­சியை கண்­டு­விட்­டனர். எனவே எம்­மீ­தான மக்­களின் நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

மேலும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் ஊடாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி வந்­ததும் நான் முன்­னின்று ஒரு முக்­கிய விட­யத்தை செய்­ய­வுள்ளேன். அதா­வது கல்வி பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர மற்றும் உயர்­தர பரீட்­சைக்­கா­லத்தில் நாட்டில் தேர்தல்களை நடத்த முடியாது என்ற வகையில் சட்ட மூலம் ஒன்றை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். அதனை நானே முன்னின்று செய்வதற்கு திட்டமிட் டுள்ளேன் என்றார்.