Breaking News

ரணில் உள்ளிட்ட ஐவர் நஞ்சருந்த வேண்டும்!

நல்­லாட்சி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்­சி­யினர் செய்­து­வரும் பகல் கொள்­ளை­யா­னது வெட்­கப்­ப­ட வேண்­டிய விடய­மாகும்.

மக்களை ஏமாற்றி செய் யும் ஊழல் ஆட்­சியை நினைத்து பிர­தமர் ரணிலும் அவ­ரது திருடர் கூட்­டமும் நஞ்சு அருந்தி சாக­வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், மாது­லு­வாவே சோபித தேரரும் எதிர்­பார்த்த நல்­லாட்சி இது அல்ல எனவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போது கலந்­து­கொண்­டி­ருந்த கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான டிலான் பெரேரா, பந்­துல குண­வர்­தன, உதய கம்­மன்­பில ஆகியோர் ஐந்து விஷ போத்­தல்­க­ளுடன் ஊட­க­வி­யலாளர் சந்­திப்பை ஆரம்­பித்தனர்.

டிலான் பெரேரா குறிப்­பி­டு­கையில்,

எமது அர­சாங்­கத்தில் ஊழல்கள் நிறைந்­துள்­ள­தா­கவும், மக்­களின் பணத்தை மஹிந்த அர­சாங்கம் சூறை­யா­டு­வ­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எம்­மீது குற்றம் சுமத்­தினர். ஆனால் இப்­போது மக்­களின் பணத்தை மட்­டு­மல்­லாது சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்றி சர்­வ­தேச பணத்­தையும் கொள்­ளை­ய­டிக்­கின்­றனர். மத்­தி­ய­வங்கியில் இடம்பெற்றுள்ள ஊழல் நாட்டில் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய மோச­டி­யாக இனங்­கா­ணப்­பட்­டுள்ளது. கொழும்பு –கண்டி அதி­வேக நெடுஞ்­சாலையை புன­ர­மைப்­ப­தாகக் கூறி இரண்­டா­வது கொள்­ளை­யினை செய்­துள்­ளனர்.

இலங்­கையின் வர­லாற்றில் இது­வரை காலமும் மத்­தி­ய­வங்கி நிதியில் எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியோ அல்­லது மத்­தி­ய­வங்கி ஆளு­நரோ கைவைத்­த­தில்லை.ஆனால் இந்த அர­சாங்கம் மத்­தி­ய­வங்கி நிதியை கொள்­ளை­ய­டித்­துள்­ளது. மத்­தி­ய­வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹிந்­திரன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக ஆகியோர் ஒன்­றி­ணைந்து மத்­தி­ய­வங்கி நிதியை கொள்­ளை­ய­டித்­துள்­ளனர். அது அவ்­வாறு இருக்­கையில் புதி­தாக நாட்டில் இன்­னு­மொரு மிகப்­பெ­ரிய கொள்­ளையை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மேற்­கொண்­டுள்­ளனர்.

எமது அர­சாங்கம் இந்த நாட்டில் அதி­வேக நெடுஞ்­சா­லை­களை புனர­மை­துள்­ளது. இன்று அனை­வரும் இல­கு­வாக பய­ணிக்கக் கூடிய வகையில் நாம் இந்த நாட்டில் அதி­வேக நெடுஞ்­சா­லை­களை அமைத்­துள்ளோம். ஆனால் நாம் மேற்­கொண்ட வீதி அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை அனைத்தும் மிகப்­பெ­ரிய மோச­டி­யென எம்மை ஐக்­கிய தேசியக் கட்­சியும், எமது கட்­சியில் இருந்து வெளி­யே­றிய ஒரு­சி­லரும் குற்றம் சுமத்­தினர்.

 நாம் மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டிப்­ப­தாக தெரி­வித்­தனர். ஆனால் இப்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தூய்­மை­யா­ன­வர்கள் மிகப்­பெ­ரிய கொள்­ளை­யினை மேற்­கொண்­டுள்­ளனர். அதா­வது கொழும்பு –கண்டி அதி­வேக நெடுஞ்­சாலை அமைப்­ப­தற்­காக நாம் 3.5 பில்­லியன் நிதி­யொ­துக்­கீடு செய்­தி­ருந்தோம். அதே பாதை­யினை அதை­விட அகலம் குறைந்த அளவில் நிர்­மா­ணிக்க ஐக்­கிய தேசி­யக கட்சி நாம் திட்­ட­மிட்ட தொகை­யிலும் பார்க்க 5௦௦ பில்­லியன் ரூபாய்­களை மேல­தி­க­மாக ஒதுக்­கி­யுள்­ளது.

அது­மட்டும் இல்­லாது தேர்தல் காலத்தில் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் மற்றும் மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளக் கூடாது என தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்­தி­ருந்த போதிலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று கொழும்­பு-­–கண்டி நெடுஞ்­சாலை வீதிக்­கான அடிக்கல் நிகழ்வில் கலந்­து­கொண்­டுள்ளார். அதேபோல் தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளார். ஆகவே இவர்கள் மக்­களை ஏமாற்றி தமது ஆட்­சியை தக்­க­வைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.

மேலும் பாதாள உலக கோஷ்­டி­க­ளையும், கடத்­தல்­கா­ரர்­க­ளையும் வைத்து தேர்தல் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக வின் ஆதரவாளர்கள் மீதான துப்­பாக்கி சூடு சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருப்­பது யார் எனத் தெரிந்தும் இன்­று­வரை எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதேபோல் பதுளை பிர­தே­சத்தில் சட்­ட­வி­ரோத மணல் அகழ்வு நட­வ­டிக்­கை­களை ஹரின் பெர்­னாண்டோ மேள்கொள்­கின்றார். 

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இளைஞர் அணி என்ற பெயரில் கட்­சியின் சின்னம் போதித்த கைபட்டி வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வரு­கின்றார். இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்கள் நாட்­டையும் மக்­க­ளையும் முழு­மை­யாக அழிக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். எம்மை விமர்­சித்­த­வர்கள் இப்­பொது எம்­மீது சுமத்­திய குற்­றச்­சாட்டை விடவும் இரண்டு மடங்கு கொள்­ளை­ய­டிக்­கின்­றனர்.

அண்­மையில் மாது­லு­வாவே சோபித தேரர் ஒரு நிகழ்வில் உண்­மை­யான கருத்­தொன்றை முன்­வைத்­தி­ருந்தார். அதா­வது மக்­களின் சொத்­து­களை சூறை­யா­டிய ஆட்­சி­யாளர் யாராக இருந்­தாலும் அவர்கள் விஷம் அருந்தி சாக­வேண்டும் எனக் குறிப்­பிட்டார். அவர் கோரிய அந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இருந்தார். ஆகவே சோபித தேரரின் கருத்­தா­னது ரணி­லையே சுட்டிக் காட்டியுள்ளது. எனவே இப்போது நாம் எமது செலவில் ஐந்து விஷ போத்தல்களை வாங்கி வந்துள்ளோம். 

இந்த ஐந்து போத்தல்களையும் பிரதமர் ரணிலுக்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், ஊவா மாகாண முதலைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கும், நிதி அமைச்சர் ரவிக்கும், மத்தியவங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கும் கொடுக்கின்றோம். இந்த விஷத்தை எடுத்துக்கொண்டு மாதுலுவாவே சோபித தேரரின் முன்சென்று தாம் செய்த தவறுக்காக மன்னிப்புக்கேட்டுவிட்டு இதனை அருந்தி சாகவேண்டும் என்றார்.