Breaking News

சந்திரிகாவை சு.க.விலிருந்து நீக்குவது தொடர்பில் மத்தியகுழுவில் ஆராயப்படும் - சுசில் தகவல்

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து நீக்­கு­வது குறித்தும், அவர்­மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பாகவும் கட்­சியின் அடுத்த மத்­திய குழுக் கூட்­டத்தில் ஆரா­யப்­படும் 

என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­யலர் சுசில் பிரே­ம்ஜயந்த தெரி­வித்­துள்ளார்.தேர்தல் காலத்தில் கட்­சியை குழப்­பி­ய­டிக்க முடி­யா­த­தனால் இப்­போது அமைதி காப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் போச­கரும் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­ன­ரு­மான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க அண்­மையில் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் உறுப்­பினர் அர்­ஜுன ரண­துங்­கவின் கட்சிக் காரி­யா­லயத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்­த­துடன் தான் அர்­ஜுன ரண­துங்­கவை ஆத­ரிப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்­த­விடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தீர்­மா­னங்கள் அனை­வ­ருக்கும் சமமானதாகவே செயற்படுத்தப்படும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் எவ­ரேனும் ஏனைய கட்­சி­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டாலோ அல்­லது கட்­சிக்கு முர­ணான வகையில் செயற்­பட்­டாலோ அவர்கள் மீதான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்­பது கட்­சியின் மத்­தி­யக்­குழுவின் தீர்­மா­ன­மாகும்.

அந்த வகையில் தான் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் கட்­சியை விட்டு வெளி­யே­றி­ய­வுடன் அவர்கள் மீதான ஒழுக்­காற்று நட­வ­டிக்கையை மேற்­கொண்டோம். மத்­தி­ய­குழு கூட்­டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடு­ப்ப­தாக இருந்தோம். ஆனால் அதற்கு முன்­ன­தா­கவே கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மானம் எடுத்­து­விட்டார். கட்­சியில் இருந்து வெளி­யே­றிய உறுப்­பி­னர்­களை நீக்­கு­வ­தாக அவர் தெரி­வித்­ததனூடாக மத்­திய குழுக் கூட்­டத்தின் வேலையை குறைத்­து­விட்டார்.

இந்த சட்டம் கட்­சியின் அனை­வ­ருக்கும் பொருந்தும். கட்­சியின் போஷகரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான சந்­தி­ரிகா குமா­ர­துங்க கட்­சியின் இருந்­து­கொண்டே எதிர்க்கட்­சியின் உறுப்­பி­ன­ருக்கு ஆதரவு வழங்­கு­வ­தாக குறிப்­பிட்­டி­ருப்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

அண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்சின் வேட்­பாளர் அர்­ஜுன ரண­துங்­கவின் அலு­வ­ல­கத்­துக்கு சந்­தி­ரிகா சென்­றி­ருந்­த­மையும், தாம் அர்­ஜு­ன­வுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்­த­மையும் ஊட­கங்­களின் மூல­மாக அறி­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது. எனவே இந்த செயற்­பா­டுகள் தொடர்பில் நாம் தீர்­மானம் எடுப்போம்.

மேலும் அவரை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து நீக்­கு­வது குறித்தும் அவர்­மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது குறித்தும் கட்­சியின் அடுத்த மத்­திய குழுக் கூட்­டத்தில் ஆரா­யப்­படும். இப்­போது அனை­வரும் தேர்­த­லுக்கு முகம்­கொ­டுத்­தி­ருப்­பதால் கட்சியின் மாற்றங்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானங்களை எடுக்க முடியாது.எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கூடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது மத்தியகுழுக் கூட்டத்தில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உறுப்புரிமை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.