Breaking News

புலிகளின் கடும்போக்கு கொள்கையில் பயணிக்கும் விஜயகலா! கெஹெலிய குற்றச்சாட்டு

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ்.மாவட்ட வேட்­பாளர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புலி­களின் கடும்­போக்­கு­வாத பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றார்.

அவரின் உரை­க­ளி­லி­ருந்து இதனை நான் புரிந்­து­கொண்டேன் என்று முன்னாள் அமைச்­சரும் ஐ.ம.சு.மு.வின் கண்­டி­மா­வட்ட வேட்­பா­ள­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வல தெரி­வித்தார்.

தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் தொடர்பில் கேச­ரிக்கு கருத்து வெளியி­டு­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ்.மாவட்ட வேட்­பாளர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் அர­சியல் பேச்­சுக்கள் சில­வற்றை நான் அண்­மையில் செவி­ம­டுத்தேன். புலிகள் இருந்த காலத்தில் வடக்கில் குற்­றச்­செ­யல்கள் இருக்­க­வில்லை என்றும் தற்­போது அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் எனவே பொலி­ஸாரை வடக்­கி­லி­ருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறி­யதை நான்­கேட்டேன். இதன் மூலம் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புலி­களின் கடும்­போக்­கு­வாத பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றமை தெளி­வா­கின்­றது.

இவ்­வாறு கடும்­போக்கு கொள்­கையில் பய­ணிப்­பதன் மூலம் எத­னையும் சாதிக்க முடி­யாது. ஆனால் விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கடும்போக்குக் கொள்கையில் பயணிப்பது நன்றாகவே தெரிகின்றது என்றார்.