Breaking News

மஹிந்­தவை பாது­காப்­ப­தற்கு ஐ.ம.சு.வில் சிலர் செயற்­பட்டு வரு­கின்­றனர்! ரணில் குற்­றச்­சாட்டு

மஹிந்த ராஜபக் ஷவை பாது­காத்து அர­சியல் ­ந­டத்­து­வ­தையே முதன்­மை­யாகக் கொண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் சிலர் செயற்­ப­டு­கின்­றனர். 

இவர்­க­ளுக்கு மக்­களின் எதிர்­காலம் தொடர்பில் அக்­க­றை­யில்லை என தெரி­வித்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க 60 மாதங்­களில் புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் எமது திட்­டத்­திற்கு உத­வு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரிடம் நான் வேண்­டுகோள் விடுக்­கின்றேன் என்றும் தெரி­வித்­துள்ளார்.

ரம்­புக்­க­னையில் இடம்­பெற்ற ஐ.தே.முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் ஒரு பிரி­வி னர் மக்களின் எதிர்­கா­லத்தைப் பற்றி சிந்­திக்­காது மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்­கா­லத்தைப் பற்றி சிந்­திக்­கின்­றனர். இதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாகப் பிள­வு­பட்­டுள்­ளது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்கும் சிலர் மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிக்­கா­ததால் அவர் கலந்து கொள்ளும் கூட்­டங்­களில் கூச்சல் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.இது அர­சியல் ஒழுக்கச் சீர்­கேட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. கடந்த கால தேர்­தல்­களில் முன்­ன­ணிக்கு ஆத­ர­வ­ளித்த சிலர் எமது கூட்­டங்­களில் கூச்­ச­லிட்­டனர். குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தினர்.

இத்­தேர்­தலில் இவை தலை­கீ­ழாக மாறி மஹிந்­த­வுக்கு எதி­ரா­ன­வர்­க­ளுக்கு அதா­வது தமது கட்­சியின் வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக கூச்­ச­லிட ஆரம்­பித்­துள்­ளனர். இன்று எம்­முடன் இவர்­க­ளுக்கு தேர்­தலில் போட்­டி­யில்லை. அவர்­க­ளது கட்­சிக்­குள்­ளேயே மோதல்கள் உரு­வா­கி­யுள்­ளன.

முன்­ன­ணி­யினர் இன்று ராஜபக் ஷவின் எதிர்­கா­லத்தைப் பற்­றியே சிந்­திக்­கின்­றனர். ஆனால் நான் மக்­களின் எதிர்­காலம் தொடர்­பா­கவே சிந்­திக்­கின்றேன். இன்­றைய “நல்­லாட்­சியை”, “நாச­கார” ஆட்­சி­யென விமர்­சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வக்கிரமாக விமர்­சிக்­கின்றார்.

இதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னர்தான் நடுத்­தெ­ருவில் அனா­தை­க­ளாக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால் ஐ.தே.முன்­னணி எவ­ரையும் சுதந்­திரக் கட்­சி­யினர் என விமர்­சிப்­ப­தில்லை.அவர்­களை எமது 60 மாதங்­களில் புதிய நாடு என்ற திட்­டத்­திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம். அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நாம் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே எதிர்வரும் 17ஆம் திகதி நல்லாட்சியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.