Breaking News

சாத்­தி­ய­மற்ற கோரிக்­கை­களை முன்­வைத்து அப்­பாவி மக்­களை திசை­தி­ருப்ப வேண்டாம் - கரு­ணா­நா­யக்க

தேர்தல் காலத்தில் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக சாத்­தி­ய­மற்ற கோரிக்­கை­களை முன்­வைத்து அப்­பாவி மக்­களைத் திசை ­தி­ருப்­ப­வேண்­டா­மென நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

 அத்­துடன் ஒற்­றை­யாட்­சிக்குள் தமிழ் மக்கள் நிம்­ம­தி­யாக வாழும் வகை­யி­லான அதி­கூ­டிய அதி­காரப் பகிர்வை தாம் வழங்­குவோம் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கை யில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல் தீர்வு விட­யத்தில் வடக்கு கிழக்கு இணை ப்பு, சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி போன்ற விட­யங்­களை உள்­வாங்­கி­யுள்­ளது. அது தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைப்­பது அவர்­களின் ஜன­நா­யக உரிமை. ஆனால் சாத்­தி­ய­மான விட­யங்­களை மட்­டுமே மக்கள் மத்­தியில் கூற­வேண்டும்.

இந்த நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­பட்டு நிரந்­தர சமா­தானம் நிலை­பெ­ற­வேண்டும். அபி­வி­ருத்தி நோக்­கிய பய­ணத்தில் வெ ற்றி கண்டு நாடு புது­யுகம் பெற­வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நாம் அன்று முதல் இன்­று­வரை செயற்­பட்டு வரு­கின்றோம்.

இந்த நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சியை முடி­வுக்குக் கொண்­டு­வந்து தமிழ் மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்ட பல்­வேறு விட­யங்­களை ஜன­வரி 8ஆம் திக­திக்குப் பின்னர் எமது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர்ப்­ப­ணிப்­பு­மிக்க செயற்­பா­டுகள் மூலம் முன்­னெ­டுத்­துள்ளோம்.

உயர் பாது­காப்பு வல­யங்­களை அகற்­றுதல், வாழ்­வா­தாரம் உள்­ளிட்ட அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் ஆரம்பப் பணி­களை மேற்­கொள்ளல், மீள் குடி­யேற்­றங்­களை உறு­திப்­ப­டுத்தி நிரந்­தர வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்தல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை 100 நாட்­க­ளுக்குள் முன்­னெ­டுத்தோம். நாட்டில் அனைத்து மக்­களும் மகிழ்ச்­சி­யாக வாழும் கால­மொன்று உரு­வெ­டுத்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் வாக்­கு­க­ளுக்­காக சாத்­தி­மற்ற விட­யங்­களை அப்­பாவி மக்கள் மத்­தியில் கூறி பின்னர் இந்த நாட்டின் நல்­லி­ணக்­கத்தை பாதிப்­ப­டையச் செய்யும் வகை­யி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது தவ­றா­ன­தாகும்.

நாம் தமிழ் நிம்­ம­தி­யாக வாழ­வேண்டும் என்­ப­தையும் அவர்­களின் வாழ்க்கை சுபீட்சமாக அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர சமாதானத்தையே விரும்புகின்றோம். அதன் காரணமாகவே ஒற்றையாட்சிக்குள் அதிகூடிய அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம் என்றார்.