Breaking News

மஹிந்தவின் இனவாதத்திற்கு களம் அமைக்கும் சமஷ்டி கோரிக்கை' - ஜே.வி.பி.குற்றஞ்சாட்டு

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் “சமஷ்டி” கோரிக்கை தென்­னி­லங்­கையில் மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான கூட்­டத்தின் இன­வா­தத்­திற்கு களம் அமைத்துக் கொடுத்­துள்­ள­து என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. 

தத்­த­மது அர­சியல் தேவைக்­காக இன­வா­தத்­திற்கு தூப­மிட்டு நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர் என்றும் அக்­கட்சி குறிப்பிட்டது.

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலை­மை­ய­கத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரி­வித்தார். ரில்வின் சில்வா மேலும் குறிப்பிடுகையில்

வட மாகாண சபை ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு எது­வி­த­மான சேவை­க­ளையும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு முன்­னெ­டுக்­க­வில்லை. வட மாகாண சபையால் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய சலு­கை­கள் நலன்­பு­ரி என்பன யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு செல்லவில்லை. இதனால் கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­களின் நம்­பிக்­கையை இழந்து விட்­டனர். இவ்­வா­றா­னதோர் சூழ் நிலை­யி­லேயே தேர்­தலை இலக்­காக வைத்து தமிழ் மக்­களை ஒவ்­வொரு தேர்­தல்­க­ளிலும் ஏமாற்றும் வித்­தையை கூட்­ட­மைப்­பினர் கையில் எடுத்­துள்­ளனர்.

தேர்தல் காலங்­களில் இன­வாத ரீதி­யாக விடயங்­களை முன்­னெ­டுக்கும் கூட்­ட­மைப்பு தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சமஷ்டி முறையின் கீழே அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற கருத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இக் கருத்து தென்­னி­லங்­கையில் இன­வாத சக்­தி­க­ளான மஹிந்த ராஜபக்ஷ விமல் வீர­வன்ச உள்ளிட்ட கூட்­டத்­தின் இன­வாத பிர­சா­ரத்­திற்கு களம் அமைத்துக் கொடுத்­துள்­ளது.

வட­மா­காண சபையூடாக மக்களுக்கு எத­னையும் செய்­யாத கூட்­ட­மைப்பு சமஷ்டி ஊடாக அதி­காரப் பர­வ­லாக்கல் எனக் கூறு­கிறது. தெற்கில் ஒற்­றை­யாட்சி வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்ற நிலையில் கூட்­ட­மைப்பு நாட்டைப் பிரிக்க முயற்­சிக்­கின்­றது என்ற இன­வாதம் சிங்­கள மக்கள் மத்­தியில் விதைக்­கப்படுகின்றது.

தத்­த­மது அர­சியல் தேவை­க­ளுக்­கா­கவும், பத­வி­க­ளுக்­கா­கவும் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­கா­கவும் இன­வாதம் விதைக்­கப்­ப­டு­கின்­றது. சமஷ்டி, ஒற்­றை­யாட்சி மற்றும் அதிகாரப்பரவலாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது. அனைத்து இனத்தவர்களுக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்படுவதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியும் என்றார்.