Breaking News

பரிந்­து­ரை­களை அமுல்படுத்த பிரே­ரணை நிறை­வேற்றுங்கள்! சர்­வ­தேச மன்­னிப்புச் சபை கோரிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை குறித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையின் பரிந்­து­ரை­களை இலங்கை நிறை­வேற்­ற­வேண்­டு­மென ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரே­ர­ணை­யொன்றை நிறை­வேற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை தெரி­வித்­துள்­ளது.

அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச உத­வியை இலங்கை பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மென உறுப்பு நாடுகள் இலங்­கையை வலி­யு­றுத்த வேண்டும் எனவும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்­றைய தினம் உரை­யாற்­றிய மன்­னி்ப்புச் சபையின் பிர­தி­நிதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் உள்­ளக விசா­ரணை நடத்­து­வ­தாக வழங்கி வாக்­கு­று­தி­களை கட்­டாயம் நிறை­வேற்­ற­வேண்டும். இது தொடர்பில் பரந்­த­ள­வி­லான ஆலோ­ச­னைகள் அவ­சியம். பொறுப்­புக்­கூறல் செயல்­பாட்டில் பாதிக்­கப்­ப­டு­வர்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இவை அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கை­க­ளாக இருக்­க­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி அர­சாங்கம் உண்­மையைக் கண்­ட­றிதல், மற்றும் நீதி, நியாயம், இழப்­பீடு வழங்­குதல் போன்ற செயற்­பாட்டில் அர­சாங்கம் பொது­மக்­களின் நம்­பிக்­கையை வெற்­றி­கொள்­ள­வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­டாமல் இருக்கும் செயற்­பாடு நிறுத்­தப்­ப­ட­வேண்டும். குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் கொல்­லப்­பட்­டமை, மற்றும் அர­ச­சார்­பற்ற நிறு­வ­னத்தின் 17 பேர் மூதூரில் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இவை தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கைகள் விரை­வாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வதை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். அது­மட்­டு­மன்றி அவ­சி­ய­மான சட்ட நிறு­வனம் சார் மறு­சீ­ர­மைப்­புக்­களை மேற்­கொள்­ள­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி கடத்­தல்கள், தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­துடன் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும். இலங்கை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது. இதில் ஐ.நா. மனித உரிமை விசா­ரணை அறிக்­கையின் பரிந்­து­ரைகள் கவ­னத்தில் எடுக்­கப்­படும் என கூறப்­பட்­டுள்­ளது. இவை தொடர்பில் சர்­வ­தேச அவ­தா­னமும் தொழில்­நுட்ப உத­வியும், கண்­கா­ணிப்பும் இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் தொழில் நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்ள இணக்கம் தெரி­விக்­க­வேண்டும்.

வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையின் பரிந்­து­ரை­களை இலங்கை நிறைவேற்றவேண்டுமென ஐ.நா. மனித உரிமை பேரவை பிரேரணையொன்றை நிறைவேற்றவேண்டியது அவசியமாகும். அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைபேரவைக்கு தொடர்ச்சியாக அறிக்கைகளை முன்வைப்பதற்கும் பணிக்கப்படவேண்டும். உறுப்பு நாடுகள் சர்வதேச உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையை வலியுறுத்த வேண்டும்.