Breaking News

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - சிவில் சமூக அமைப்புக்கள்

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சிவில் சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிவில் சமூக அமைப்புக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக சிவில் சமூக அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.  2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிவிலியன்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படல்இ காண்காணிப்புக்கள்இ ஊடகவியலாளர்கள்இ சிவில் சமூக செயற்பாட்டு குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீது சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளன.

கடத்தல்கள்இ கைதுகள்இ பாலியல் வன்முறைகள்இ சித்திரவதைகள் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகள் சித்திரவதைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசாங்கமும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளன.படையினர் சார் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரம் தொடர்ந்தும் கேள்விக்குறியதாகவே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளன.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிரந்தரக் காரியாலயமொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டுமென இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.