Breaking News

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகின்றார்

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ஜேர்­மனியின் வெளி­வி­வ­கார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்­மியர் இன்று செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை வரு­கின்றார்.

இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ரவீர, எதிர்க்­கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் ஜேர்மன் வெளி­வி­வ­கார அமைச்சர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது இலங்­கைக்கும் ஜேர்­ம­னிக்கும் இடை­யி­லான வர்த்­தக மற்றும் பொரு­ளா­தார உற­வு­களை பலப்­ப­டுத்­துதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது .

இன்­று­காலை 10.30 மணி­ய­ளவில் ஜேர்மன் வெளி­வி­வ­கார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்­மியர் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இதன்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவு குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் வட பகு­திக்கும் விஜயம் செய்­ய­வுள்ள ஜேர்மன் வெளி­வி­வ­கார அமைச்சர் கிளி­நொச்­சியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறு­வ­னத்­தையும் பார்வையிடவுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டின் பின்னர் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இம்முறையே முதற்தடவையாக விஜயம் செய்கின்றார்.