Breaking News

பக்கச்சார்பாகவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

பயங்கரவாதிகளுக்கு பக்கச்சார்பானதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதில் அடங்கியுள்ள விடயங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரண வக்க தெரிவித்துள்ளார்.


எமது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தாரத்தடைகள் விதிக்­கப்­ ப­டலாம். ஆணை பிறப்­பித்­த­வர்­களின் பெயர்கள் வெளி­யி­டப்­ப­டலாம் என்ற அச்சம் இன்று நீங்­கி­யுள்­ளது. அவ்­வா­று எது­வுமே அறிக்­கையில் இடம்­பெ­ற­வில்­லை­யென்றும் அமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.
\
மேல் மாகாண சபை அமைச்­ச­ராக பத­வி­யேற்ற பின்னர் நிஷாந்த ஸ்ரீவர்­ண­சிங்க மாகாண அமைச்சில் தனது கடை­மை­களை அண்­மையில் பொறுப்­பேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் சம்­பிக ரண­வக்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது

ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை தொடர்­பாக நாட்டு மக்கள் மத்­தியில் விவாதம் உரு­வா­கி­யுள்­ளது.இவ் அறிக்­கை பக்கச் சார்­பற்ற அறிக்­கை­யல்ல என்­பதைக் கூற வேண்டும்.இலங்­கையில் இடம்­பெற்ற யுத்தம் தொடர்பில் உண்­மை­யான தக­வல்கள் இதில் வெளி­யா­க­வில்லை.

நாடு தொடர்பில் காணப்­பட்ட, சில பிழை­யான அவ­தா­னிப்­புக்­க­ளுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைத்­தது. யுத்­தத்தின் போது தமிழ் மக்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டார்கள் என்றும் யுத்­தத்­திற்கு ஆணை பிறப்­பித்த 42 பேரின் பெயர்கள் தம்­மிடம் இருப்­ப­தா­கவும், அவர்களின் பெயர்கள் வெளி­யி­டப்­ப­டு­மென்ற அச்சமும் சந்­தேகமும் நில­வி­யது.

நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தாரத் தடை விதிக்­கப்­படும் எனவும் அதற்­காக ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அடிப்­ப­டை­யாக எடுத்துக் கொள்­ளப்­படும் என்றும் சந்­தே­கமும் அச்­சமும் நில­வி­யது.அது மட்­டு­மல்­லாது படை­யினர் அர­சி­யல்­வா­திகள் வெளி­நா­டு­களில் வைத்து கைது செய்­யப்­படவுள்­ளனர் என்றும் சந்­தேகம் நில­வி­யது.இவ் அறிக்­கைபயங்­க­ர­வா­தி­க­ளுக்கு பக்கச் சார்­பான விட­யங்­களை வெளி­யிட்­டுள்­ளது.

இந்த அறிக்­கையின் பிர­காரம் அனைத்தும் நிறை­வேற்­றப்­ப­ட­மாட்­டாது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இது தொடர்பில் விவாதம் எதிர்­வரும் 30ஆம் திகதி நடை­பெ­றலாம்.
நாட்டின் தேசிய நல்­லி­ணக்கம் சமா­தா­னத்­திற்கு குந்­தகம் ஏற்­ப­டாத விதத்தில் இவ்­வ­றிக்கை நிறை­வேறும் என எதிர்­பார்க்­கின்றோம்.

ஐ.நா. சபை மற்றும் பாது­காப்பு சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகளையே நிறைவேற்றுவதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. எமது நாட்டில் பலமான ஜனநாயக சட்ட. நீதித் துறை செயல்படுவதை எதிர்காலத்தில் எம்மால் நிரூபிக்க முடியும் என்றார்.