Breaking News

தொகு­தி முறையிலேயே உள்­ளூ­ராட்சி தேர்தல் - அமைச்­ச­ர­வையில் தீர்­மானம்

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை தொகுதி மற்றும் விகி­தா­சார முறை­மையில் அமைந்த புதிய தேர்தல் முறை­மையில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­ட­த்தின்­போதே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் புதிய தேர்தல் முறை­மைக்கு அமைய எல்லை நிர்­ணய செயற்­பா­டு­களில் ஏதா­வது அநீ­திகள் ஏற்­பட்­டுள்­ள­னவா என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் எந்த முறை­மையில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை நடத்­து­வது என்­பது தொடர்பில் கேள்வி எழுந்­துள்ள நிலை­யி­லேயே புதிய முறை­மையில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னம்­எ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யி­லேயே புதிய முறை­மையில் நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது. மேலும் எல்லை நிர்­ணய செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப குழுவில் பைசர் முஸ்­தபா கபீர் ஹஷீம், ரவூப் ஹக்கீம் ,மனோ கணேசன் ,துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட அமைச்­சர்கள் இடம்­பெற்­றுள்­ளனர்.

நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தற்­போது நடை­மு­றையில் உள்ள விகி­தா­சார தேர்தல் முறை­மையில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அதே தினத்தில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது புதிய தேர்தல் முறைப்­படி நடத்­தப்­ப­ட­வேண்டும் என தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இறு­தியில் தற்­போது புதிய முறையில் தேர்­தலை நடத்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.