Breaking News

தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு - வைகோ

இந்தியா – இலங்கை இராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இந்தியா– இலங்கை இராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. 

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தில் நாளை கொண்டுவரும் தீர்மானத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது. ஏற்கனவே தமிழக சட்ட மன்றத்தில் சர்வதேச விசாரணை வேண்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு மதிக்காமல் குப்பையில் தூக்கி போட வேண்டிய நிலையில்தான் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

போர்க்குற்றம் நடந்து இலட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்ட நிலையில் தீர்மானத்தை கொண்டு வர இந்திய அரசு முயற்சிக்காமல் மாறாக அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது. எனவே நாளை எந்தவிதமான பலனும் கிடைக்காது. 

அனைத்து விதத்திலும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது, என்றார்.ய