Breaking News

கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!

இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

இந்­திய அணிக்கெ­தி­ரான டெஸ்ட் தொடரின் போது, கௌசலின் பந்துவீச்சில் சந்­தேகம் எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி அவர் சென்­னையில் பந்துவீச்சு பரி­சோ­த­னைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.