Breaking News

ஐ.நா. அறிக்கை பரிந்துரைக்கு நிகரானதாக அமெரிக்காவின் பிரேரணை அமையவில்லை

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள்,யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்­பாக அமெ­ரிக்க அனு­ச­ர­ணையில் சமர்­ப்பிக்­கப்­பட்ட புதிய விசா­ரணை பொறி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு, 

முன்­ன­தாக வட­மா­கா­ணத்தில் குவிக்­கப்­பட்­டுள்ள படை­யினர் அகற்­றப்­பட்டு சாட்­சி­யங்­க­ளுக்­கான பூரண பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு ஐ.நா.வின் கண்­கா­ணிப்பு நிறு­வ­னங்கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்

அதே­நேரம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் அறிக்­கையில் சிபார்சு செய்­யப்­பட்ட விசா­ரணைப் பொறி­மு­றைக்கு நிக­ரா­ன­தாக தற்­போது அமெ­ரிக்க அனு­ச­ர­ணையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ணையில் கூறப்­பட்­டுள்ள பொறி­மு­றையை கரு­த­மு­டி­யா­தெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் வௌியிட்ட அறிக்­கையின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தி அமெ­ரிக்கா அனு­ச­ர­ணை­யுடன் கடந்­த­வாரம் வெ ளியிட்ட நகல் பிரே­ரணை வரைபில் காணப்­பட்ட 26 பந்­திகள் 20 பந்­தி­க­ளாக குறைக்­கப்­பட்டு் திருத்­தங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட புதிய பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டமை தொடர்பில் கருத்து வௌியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர்­பாக சர்வதேச விசார­ணை­யொன்று நடத்­தப்­ப­ட­வேண்டுமென தமி­ழ­ரசுக் கட்சி உட்­பட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. தேர்தல் மேடை­க­ளிலும் அவ்­வி­ட­யமே வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதற்கே மக்கள் தமது ஆணை­யையும் வழங்­கி­னார்கள்.

எனினும் அண்­மையில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் மற்றும் புதிய அர­சாங்­கத்தின் கோரிக்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்­கையில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்களை உள்ளடக்கி கலப்பு விசா­ரணை பொறி­மு­றை­யூ­டாக சுயா­தீன விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் சமர்ப்­பித்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க அனு­ச­ர­ணை­யி­லான முத­லா­வது வரைபு சமர்ப்­பிக்­கப்­பட்டு பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு பின்னர் தற்­போது இலங்­கையில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக பொது­ந­ல­வாய மற்றும் வௌிநாட்டு நீதி­ப­திகள் , விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய நம்­ப­க­ர­மான நீதிச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கு­மாறு கூறப்­பட்­டுள்­ளது. இவ்­வி­சா­ரணைப் பொறி­மு­றை­யா­னது ஐ.நா.அறிக்­கையில் சிபார்சு செய்­யப்­பட்ட கலப்பு விசேட நீதி­மன்­றத்­திற்கு நிக­ரா­ன­தாக காணப்­ப­ட­வில்லை.

எனினும் இதனை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை. அதில் கூறப்­பட்ட விட­யங்கள் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தையே வலி­யு­றுத்­து­கின்றோம். அதே­நேரம் குறித்த விசா­ரணைப் பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து படை­யினர், புலா­னாய்­வா­ளர்கள் வெளியேற்­றப்­ப­ட­வேண்டும்.

வட­மா­கா­ணத்தில் ஒன்­றரை இலட்­சத்­திற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் நிலை­கொள்ளச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு மேலாக வேறு­பட்ட புல­னாய்­வா­ளர்கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் தரு­ணங்­களில் நிச்­ச­ய­மாக சாட்­சி­யங்­க­ளுக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏற்­படும் அல்­லது இவர்­க­ளுக்கு மத்­தியில் சாட்­சி­யா­ளர்கள் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு முன்­வ­ர­மாட்­டார்கள். ஆகவே அவ்­வா­றான சூழல் முற்­றாக மாற்­றப்­ப­ட­வேண்டும்.

எனவே தான் வட­மா­க­ணத்தில் உள்ள படை­யி­னர்கள் வெளியேற்­றப்­பட்டு குறித்த விசா­ரைணைப் பொறி­முறை எவ்­வி­த­மான அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டாது சுயா­தீ­ன­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். மேலும் இலங்­கையில் சாட்­சி­யங்­களை பாது­காப்­ப­தற்­கான சட்­டங்கள் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. அவை தொடர்­பா­கவும் கவ­ன­மெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது.

அதே­நேரம் உள்­நாட்டில் விசா­ர­ணைகள் முன்னெடுக்கப்படும் போது பலதரப்புக்களால் அழுத்தங்கள் அளிக்கப்படும் என்பதை மறுதலிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்ததினால் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க முடியாது. எனவே தான் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும்போது வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட குறிபிடத்தக்க பிரதேசங்களில் ஐ.நா கண்காணிப்பு அலுவலங்கள் நிறுவப்படவேண்டும். அதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உறுதிசெய்யப்படும். இவ்விடயங்கள் தொடர்பாக ஜெனீவாவில் தங்கியுள்ள தாம் பல்வேறு தரப்பினருக்கும் எடுத்துரைக்கவுள்ளோம் என்றார்.