Breaking News

சர்வதேச விசாரணையை நிறுத்தவே கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி - சுரேஷ்

இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேசப் பொறி­முறை விசா­ர­ணையை நிறுத்­தவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வழங்­கி­யுள்­ள­தென முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேசப் பொறி­மு­றையை வலி­யு­றுத்தி கடந்த வெள்ளிக்­கி­ழமை மாலை யாழ்.பேருந்து நிலை­யத்தில் இடம்­பெற்ற கையெ­ழுத்துப் போராட்­டத்தில் கலந்­து­கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ் மக்­க­ளுக்கு நீதியைப் பெறு­வ­தற்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள சர்­வ­தேச விசா­ர­ணையை தடுத்­து­நி­றுத்­தவும் அநீ­தி­களை மூடிமறைக்­க­வுமே இலங்கை அர­சாங்­கத்­தினால் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கூட்­ட­மைப்­பிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் தமிழ் மக்­களின் தலை­வர்­களைப் பயன்­ப­டுத்தி தன்னை தற்­பா­து­காத்துக்கொள்ள முயற்­சிக்­கின்­றது. இந்தப் பொறிக்குள் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் விழுந்­து­விடக் கூடாது என்றார்.

மேலும் யுத்தக் குற்­றங்கள் தொடர்­பாக உள்­ளக விசா­ரணை மூலம் தீர்­வினைப் பெற்­றுத்­தர முடி­யாது. இந்த விசா­ரணை ஈழத் தமி­ழரை ஏமாற்­று­வ­தா­கவும் காலத்தை வீண­டிக்கும் செயற்­பா­டா­கவும் அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­மட்டில் ஆரம்பம் முதலே சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும் என வலி­யு­றுத்தி வந்­துள்­ளது. ஆனால் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களில் ஒன்­றான தமி­ழ­ரசுக் கட்­சி­யிலுள்ள சிலபேர் உள்­ளக விசா­ரணை தொடர்பில் பேச ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள தமி­ழ­ரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று பங்­காளிக் கட்­சி­களும் இணைந்து சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­திய அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வைக்கு அனுப்பிவைத்­துள்­ளது.

எனவே தமிழ் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு சர்­வ­தேச விசா­ரணை மூலமே உரிய தீர்வு எட்­டப்­பட வேண்டும். இவற்றை நாம் தொடர்ந்து வலி­யு­றுத்­துவோம்.

எனவே சர்­வ­தேச விசாரணையை முடக்கும் அரசாங்கத்தின் சூழ்ச்சிப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்கள் விழுந்துவிடாமல் அதற்கு முழுமையான ஆதரவையும் சர்வ தேச ரீதியிலான ஆதரவையும் திரட்ட வேண்டும் என்றார்.