Breaking News

கூட்டமைப்பும் வடமாகாண சபையும் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் - சம்பிக்க

இலங்கை மீதான சர்­வ­தேச தலை­யீட்டை அர­சாங்கம் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் அனு­ம­திக்­காது. மாறாக நம்­பத்­த­குந்த உள்­நாட்டு தீர்­வு­களை நாம் உறு­திப்­ப­டுத்த தயா­ராக உள்ளோம். 

ஆகவே உட­ன­டி­யாக கூட்­ட­மைப்பும் வட­மா­காண சபையும் சர்­வ­தே­சத்தை வலி­யு­றுத்தும் தமது நிலை­ப்பாட்டை மாற்­றிக்­கொள்ள வேண்டும். அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள வேண்டும் என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு

நாட்டின் பிர­தான எதிர்க்­கட்சி என்­பதை நினைவில் வைத்து செயற்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். வட­மா­காண சபையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச விசா­ரணை பொறி­மு­றையை வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாட்டில் அங்­கீ­காரம் பெற்ற ஒரு பிர­தான அர­சியல் கட்­சி­யாகும். ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற தேர்­தலின் போதும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கின்­றனர்.

அவ்­வா­றான நிலையில் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் செயற்­பட வேண்டும். அந்த வகையில் கடந்த காலங்­களில் தனி அர­சாங்கம் அமைந்த நிலையில் ஆளும் கட்­சி­யா­கவும் எதிர்க்­கட்­சி­யா­கவும் பெரும்­பான்மை கட்­சிகள் செயற்­பட்­டன.

எனினும் இம்­முறை அவ்­வா­றான நிலைமை அமை­ய­வில்லை. பிர­தான இரு கட்­சி­களும் இணைந்து கூட்டு அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. இரண்டு கட்­சி­களின் உறுப்­பி­னர்­களும் அமைச்சுப் பத­வி­களை வகிக்­கின்­றனர். இந்த நிலையில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக இந்த கட்­சிகள் செயற்­பட முடி­யாது. எனினும் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய எதிர்க்­கட்சி ஒன்றை நிய­மிக்க வேண்டும்.

இம்­முறை தேர்­தலின் பின்னர் மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சிகள் தாம் எதிர்க்­கட்சி ஆச­னங்­களில் அமர்­வ­தாக தெரி­வித்­தன. அந்த வகையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி பதவி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தான் கிடைக்­க­வேண்­டிய நிலை இருந்­தது. ஆகவே அதற்கு அமைய இம்­முறை பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வா­கி­யுள்­ளது. இதில் எவ்­வி­த­மான முரண்­பா­டு­களும் இல்லை.

கேள்வி :- எனினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மித்­ததை பெரும்­பான்மை கட்­சி­களின் சிலர் விமர்­சிக்­கின்­றன்றே?

பதில் :- சம்­பந்தன் தமிழர் என்­ப­தற்­காக மாத்­தி­ரமே அவரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மித்­தமை தவ­றென இவர்கள் குறிப்­பி­டு­வ­தாயின் அதை எக்­கா­ர­ணத்தை கொண்டும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமை­யவே அவரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மித்­துள்­ளனர். ஆகவே இது ஜனா­ய­கத்தின் ஒரு நல்ல எடுத்­துக்­காட்­டாக கருதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். அதேபோல் தமிழர் ஒரு­வ­ருக்கு எதிர்க்­கட்சி பதவி கிடைப்­ப­தானால் நாடு பிரி­வி­னையின் பக்கம் செயற்­படும் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாறு­பட்ட கொள்­கையில் உள்ள கட்­சி­யாக இருந்­தாலும் கடந்த காலங்­களில் எம்­முடன் இணைந்து நாட்டில் நல்­லாட்­சிக்­கான போராட்­டத்தில் உத­வி­யுள்­ளனர். 

அதேபோல் தாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பிரி­வி­னையை ஆத­ரிக்­க­வில்லை என்­பதை தொடர்ச்­சி­யாக குறிப்­பிட்டு வரு­கின்றார். ஆகவே எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டில் பிரி­வினை ஒன்று ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அதேபோல் நாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டில் பிள­வுகள் ஏற்­ப­டு­வதை அனு­ம­திக்கப் போவ­தில்லை. கடந்த காலத்தில் இந்த நாட்­டுக்­காக எவ்­வாறு பொறுப்­புடன் செயற்­பட்­டோமோ அதே நிலைப்­பாட்டில் தான் இப்­போதும் செயற்­ப­டு­கின்றோம்.

கேள்வி :- இலங்கை மீதான தொடர்ச்­சி­யான சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை ஒன்று அவ­சியம் என்­பதை வட­மா­காண சபையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இதை எவ்­வாறு கரு­து­கின்­றீர்கள்?

வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் ஆரம்­பத்தில் இருந்தே முரண்­பா­டா­ன­தா­கவே அமைந்­துள்­ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தெரி­வா­கி­யுள்­ளது. இந்த நிலையில் இவர்கள் தமது நிலைப்­பாட்டை உட­ன­டி­யாக மாற்­றிக்­கொள்ள வேண்டும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் சந்­தர்ப்­பத்தில் மிகவும் பொறுப்­பு­டனும் நாடு மக்­களின் சார்­பிலும் நின்று செயற்ப்­பட வேண்டும் . அதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மறந்­து­விடக் கூடாது. இலங்கை மீதான சர்­வ­தேச தலை­யீட்டை இந்த அர­சாங்கம் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் அனு­ம­திக்­காது. 

மாறாக நம்­பத்­த­குந்த உள்­நாட்டு தீர்­வு­களை நாம் உறு­திப்­ப­டுத்த தயா­ராக உள்ளோம். அதற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும். தொடர்ந்தும் கூட்­ட­மைப்பு நாட்­டுக்கு முர­ணான வகையில் ஏதேனும் செயற்­பா­டு­க­களை முன்­னெ­டுக்­கு­மானால் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்­குமே சிக்­கலை ஏற்­ப­டுத்தும். ஆகவே உட­ன­டி­யாக கூட்­ட­மைப்பும் வட­மா­காண சபையும் தமது நிலை­பாட்டை மாற்­றிக்­கொள்ள வேண்டும். அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள வேண்டும்.

கேள்வி :- இந்த புதிய ஆட்­சியில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­ப­டுமா என்ற கேள்வி தமிழர் தரப்பில் தொடர்ச்­சி­யாக எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. இதற்கு பதில் உள்­ளதா?

பதில் :- நிச்­ச­யா­மாக இந்த ஆட்­சியில் நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­படும்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமையப்பெற்ற நூறு நாட்கள் தேசிய அரசாங்கத்தில் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக வடக்கில் நல்ல ஜனநாயக மாற்றங்கள் ஏற்பட்டன. அதேபோல் இப்போதும் தேசிய அரசாங்கம் அமைந்துள்ளது. 

இதில் தமிழ் சிங்கள முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும். அதேபோல் எதிர்க்கட்சி தமிழ் மக்களின் குரலாக அமைந்துள்ளது. ஆகவே இதுவே நாட்டில் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு அடிப்படியாகும் என் நன் நினைக்கின்றேன். எதிர்வரும் காலங்களை நிரந்தர சமாதானம் ஒன்றை நாம் எதிர்பார்க்கலாம்.