Breaking News

தமிழினியின் மரணத்தை தொடர்ந்து மற்றுமொரு முன்னாள் போராளி ஒருவர் மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் முள்ளிவா ய்க்கால் மனித பேரவலமான இன அழிப்பு நடைபெற்ற நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு மகளிர்க்கு பொறுப்பாக இருந்த மருத்துவ போராளி திருமதி சசிதரன் தாருஜா (29) இன்று மர்மமான முறையில் சாவடைந்துள்ளார்.


புதுக்குடியிருப்பு மருதமடு 1 ம் வட்டாரம் கைவேலியை சேர்ந்த இவர் முன்னாள் போராளி ஒருவரின் மனைவியும் 2 பிள்ளைகளின் தாயாரும் ஆவர்.

இன அழிப்பு போரின் போது திருமதி தாருஜா சசிதரன் விழுப்புண் அடைந்து உடல் முழுவதும் காயங்களுடன் வாழ்ந்து வந்தார் . குறிப்பாக இரு கண்களும் பார்வை இழந்து இருந்தார். படுகையில் படுத்திருந்த வேளை மரணம் அடைந்துள்ளார்.