Breaking News

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தைத் தோற்கடிப்போம்!

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தைத் தோற்கடிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் மக்கள் என அனைவரும் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தான் நம்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியதுபோல, ஜெனிவா அறிக்கையைவிட பரணகம அறிக்கை கடுமையானதாக இருந்தால் எமது நாட்டில், சாட்சிகளை விசாரித்து பரணகம அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.