Breaking News

வேண்டுகோளுக்கு செவி சாயுங்கள் : கண்டாவளை மக்கள் பேரணி



கண்டாவளை பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடத்தை தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள வெளிக்கண்டல் சந்தியிலேயே அமைக்குமாறு கோரி, கண்டாவளை பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இன்று வியாழக்கிழமை காலை அமைதிப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், நடந்த பேரணி முடிவில் பிரதேச செயலாளரிடம் வழங்குமாறு, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்ததொடு, பிரதிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் மாவட்டச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், கண்டாவளைப் பிரதேச செயலகம், தற்போது வெளிக்கண்டல் சந்தியில் அமைந்துள்ளது. எனவே, குறித்த செயலகத்தின் நிரந்தரக் கட்டடத்தை புளியம்பொக்கனையில் அமைப்பதற்கான நடவடிக்கை மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆகவே, அவ்வாறு இல்லாமல், அதேயிடத்தில் நிரந்தரக் கட்டடத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தே குறித்த பேரணி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.