Breaking News

பஸ் டிப்பர் விபத்து: நால்வர் பலி 33பேர் காயம்


இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் தெரிவித்தார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பஸ்ஸில் பயணம் செய்த இருவர் உயிரிழந்ததுள்ளதுடன் மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன 
சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.