Breaking News

இராணுவ வீரரின் தற்கொலை தொடர்பில் சக இராணுவச் சிப்பாய் கைது

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் சக சிப்பாய் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த பசறையைச் சேர்ந்த எஸ். பி.ஏ. லக்மல் ஜெயதிலக, நேற்று முன்தினம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கடற்படை சிப்பாயின் தற்கொலை குறித்த மரண விசாரணைகளை, நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், அல்லைப்பிட்டி கஞ்சதேவ கடற்படை முகாமில் கடமையாற்றிய சக கடற்படை சிப்பாயை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிப்பாயிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருகின்றதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.