Breaking News

ஹைபிரிட் நீதி­மன்றம் இருக்­கி­றதா? கிரி­யெல்­லவின் கேள்­விக்கு மறுத்து பதி­ல­ளித்த மஹிந்த

ஹைபிரிட் நீதி­மன்றம் எனும் பொறி முறை­யொன்று வரப்­போ­கி­றதா? அப்­ப­டி­யொன்று இருக்­கின்­றதா? என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ் மன் கிரி­யெல்ல முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.யிடம் கேள்­வி­யெ­ழுப்­பிய போது அவ்­வாறு எதுவும் கிடை­யாது என்று அவர் கையால் சைகை செய்து காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது எழுந்­த குழப்­ப­க­ர­மான நிலையின் போது “ஹைபிரிட் நீதி­மன்ற விசா­ரணை” தொடர்பில் தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்கள் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதன் போது சபைக்குள் குழப்­பமும் கூச்­சலும் நிறைந்து காணப்­பட்­டது. இந்த சந்­தர்ப்­பத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

விமல் வீர­வன்ச எம்.பி கூறு­வது போன்று ஹைபிரிட் நீதி­மன்றம் ஒன்று கிடை­யாது. அவ்­வாறு யோச­னையோ தீர்­மா­னமோ இல்லை என்றும் சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல கூறினார். எனினும் தேசிய சுதந்­திர முன்­னணி உட்­பட சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் பலரும் இணைந்து கொண்டு அர­சாங்கம் பொய் கூறு­வ­தா­கவும் ஹைபிரிட் நீதி­மன்ற முறைமை ஒன்­றுக்கு அர­சாங்கம் இணங்­கி­யி­ருப்­ப­தா­கவும் கூறினார்.

இதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் கருத்து வெளி­யிட்ட அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல, ஹைபிரிட் நீதி­மன்றம் என்ற பொறி­முறை ஒன்று இல்லை. இதனை முன்னாள் ஜனா­தி­ப­தியும் அறிவார் என்று கூறி­ய­துடன் அவ்­வா­றா­னதோர் நீதி­மன்ற பொறி­முறை இருக்­கி­றதா என்று கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இதன்­போது சபையின் குழப்ப நிலையை சிரித்­த­வாறே பார்த்துக்கொண்டிருந்த மஹிந்த ராமஜபக் ஷ கைகளால் சைகை செய்து அப்படி எதுவும் கிடையாது என கூறினார். எனினும் குழப்ப நிலை தொடர்ந்திருந்தது.