Breaking News

ஐரோப்­பிய ஒன்­றிய எம்.பி.­க்க­ளுடன் சுரேஷ் சந்திப்பு

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் உட்­பட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு விளக்கிக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­ன் தெரிவித்தார். பிரஷெல்ஸ்ல் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை குறித்து சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் தெரி­விக்­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் குறித்து இச்­சந்­திப்­பின்­போது விசேட கவனம் செலுத்­தப்­பட்­டது. குறிப்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் அறிக்­கையில் இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்­டங்கள் குறித்து சர்­வ­தேச நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்­களின் பங்­கேற்­பு­ட­னான கலப்பு விசேட நீதி­மன்றம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்டிருந்தது. 

எனினும் அமெ­ரிக்­காவின் அனு­ச­ர­ணையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணையில் பொது­ந­ல­வாய, வெ ளிநாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், விசா­ர­ணை­யா­ளர்கள் உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யையே வலி­யு­றுத்­து­கின்­றது.

கடந்த காலத்தில் உள்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள், விசா­ர­ணைக்­காக அமைக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழு­களின் செயற்­பா­டுகள் தொடர்­பாக தமிழ் மக்­க­ளுக்கு கசப்­பான அனு­ப­வங்­களே உள்­ளன. இந்­நி­லையில் தற்­போது உள்­நாட்டில் விசா­ர­ணைகளை முன்­னெ­டுப்­ப­தாக பல்­வேறு வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கும், ஐ.நாவுக்கும் வழங்­கி­யுள்­ளது. இருப்­பினும் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்துவது என்­பது குறித்து எவ்­வி­த­மான விட­யங்­களும் குறிப்­பி­டப்­ப­ட­வி­ல்லை. எனவே அவ்­வி­ட­யங்கள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு எவ்­வா­றான கட்­ட­மைப்­புக்கள் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஐரோப்­பிய ஒன்­றியம் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.

மேலும் வடக்­கிலும் கிழக்­கிலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் உள்­ளனர். இவர்­களே நேரில் கண்ட சாட்­சி­யங்­க­ளாக இருக்­கின்­றனர். இருப்­பினும் தற்­போது வரையில் இரா­ணு­வத்தின் அடக்கு முறைக்குள் சிக்­கி­யி­ருக்கும் இவர்­களால் எவ்­வாறு சுயா­தீ­ன­மாகச் செயற்­பட்டு சாட்­சி­யங்­களை வழங்க முடியும். ஆகவே உள்­ள­கப்­பொ­றி­மு­றைகள் முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­ன­தாக வட­கி­ழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வெளியேற்­றப்­ப­ட­வேண்டும். சாட்­சி­யங்கள் பாது­காப்பு தொடர்­பாக விசேட பொறி­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். மேலும் உள்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள விசா­ர­ணைகள் சுயா­தீ­ன­மாக இடம்­பெ­று­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஐரோப்­பிய ஒன்­றியம் உரிய கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு வலி­யு­றுத்­த­வேண்டும் எனக் கோரி­யுள்ளேன்.

அத்­துடன் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தற்­போ­துள்ள நிலை­மைகள், வடக்கு கிழக்கு மக்கள் அன்றாடம் எதிர்­நோக்கும் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் அவர்­களின் தேவைப்­பா­டுகள், முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய நலத்­திட்­டங்கள் தொடர்­பா­கவும் அப்­பி­ர­தி­நி­தி­க­ளி­டத்தில் எடுத்­து­ரைத்தேன் என்றார்.

நோர்வே தமிழ்த் தரப்­புக்­க­ளுடன் சந்­திப்பு

அதே­நேரம் நேர்­வேயில் உள்ள தமிழ்த் தரப்புக்களுடனும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக புதிய ஆட்சியாளர்கள், விசேடமாக வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் அங்கு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள், மக்களின் வாழ்வாதார நிலைமைகள், தேவைப்பாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல், சமுக பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.