Breaking News

பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றா­விடின் ஐ.நா.வெறுமனே இருந்துவிடாது! எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றது ஜே.வி.பி.

ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் நட்­பு­ரீ­தியில் உற­வா­டு­வதன் கார­ண­மாக அனைத்­தையும் சாதிக்க முடியும் என அர­சாங்கம் கன­வு­காணக் கூடாது. ஐக்­கிய நாடுகள் சபையின் பரிந்­து­ரை­களை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தா­விடின் நிலை­மைகள் மிக­மோ­ச­மா­ன­தாக அமையும் என்­பதை அன்­பாக ஐ.நா. வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­த­போதே வடக்கின் பக்கம் மஹிந்த ராஜபக்ஷ திரும்­பிப்­பார்த்­தி­ருந்தால் இன்று இவ்­வ­ளவு மோச­மா­ன­தொரு நிலைமை எமக்கு ஏற்­பட்­டி­ருக்­காது. உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்­டிய தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை காலம் கடத்தி கொண்­டு­சென்­ற­மையே இத்­த­னைக்கும் கார­ண­மாகும் எனவும் அவர்கள் வலி­யு­றுத்­தினார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­ற­போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

ஐ.நா. பேர­வை­யுடன் நட்பு ரீதியில் செயற்­ப­டு­வ­தனால் எம்மால் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் சமா­ளிக்­கலாம் என்று நினைப்­பது தவ­றா­ன­தாகும். அவ்­வாறு ஒரு எண்­ணத்தில் இருந்து எதையும் சாதிக்க முடி­யாது. பிர­தமர் ரணிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் ஐக்­கிய நாடு­களின் நம்­பிக்­கையை வென்­ற­தனால் இலங்­கையின் மீதான அழுத்­தங்கள் குறை­வ­டைந்­துள்­ள­தாக கொண்­டா­டு­கின்­றனர். ஆனால் இவை தொடர்ந்தும் நிலைக்­கப்­போ­வ­தில்லை. நட்பு ரீதியில் எந்­தப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வை எட்ட முடி­யாது.

ஐ.நாவின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே அவர்­களின் அனைத்து செயற்­பா­டு­களும் அமையும். அதை எமது அர­சாங்கம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்கை எதிர்­பார்த்­ததை விடவும் அழுத்தம் குறைந்து வந்­துள்­ள­மை­யினால் நாம் சாதித்­து­விட்­ட­தாக கூறு­கின்­றனர். ஆனால் இவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளதை குறு­கிய காலத்­துக்குள் செயற்­ப­டுத்­தா­விடின் நிலைமை மிக மோச­மா­ன­தாக அமையும்.

அதேபோல் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு எமது நாட்­டுக்கு வரக்­கூ­டா­தெனின் இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்­வ­தேசக் கத­வு­களை மூட வேண்டும். இலங்கை மீதான அழுத்­தங்­களில் இருந்து நாம் தப்­பிக்க வேண்­டு­மாயின் முதலில் இலங்­கையில் மனித உரிமை செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்டும். இலங்கை வாழ் மக்கள் அனை­வரின் உரி­மை­க­ளையும் சம அளவில் பலப்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் நம்­பத்­த­குந்த வகையில் சட்­ட­திட்­டங்­களை பலப்­ப­டுத்­த­வேண்டும். அதேபோல் இலங்­கையில் அனைத்து மக்­களும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகையில் நம்­பத்­த­குந்த வகையில் நீதி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

எமது நாட்டில் மனித உரி­மை­களை பலப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஐக்­கிய நாடுகள் கற்­பிக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை. உல­க­ளா­விய ரீதியில் மனித உரி­மை­களை மீறி­ய­வர்கள் எமக்கு மனித உரி­மை­களை கற்­பிப்­பது வேடிக்­கை­யான விட­ய­மே­யாகும். ஆனால் எம்­மீதும் தவ­றுகள் இல்­லா­மலும் இல்லை. கடந்த காலங்­களில் இலங்­கையில் மிக மோச­மான அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றன. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வந்­ததை மட்­டுமே பேசு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை.

அதன் பின்னர் இங்கு நடை­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் கவ­னத்தில் கொண்­டி­ருக்க வேண்டும். ஆகவே கடந்த காலத்தில் இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும். யுத்தம் முடி­வ­டைந்­த­போதே வடக்கின் பக்கம் மஹிந்த ராஜபக் ஷ திரும்­பிப்­பாத்­தி­ருந்தால் இன்று இவ்­வ­ளவு மோச­மா­ன­தொரு நிலைமை எமக்கு ஏற்­பட்­டி­ருக்­காது. அன்று மஹிந்த விட்ட சிறு சிறு தவ­றுகள் இன்று மிகப்­பெ­ரிய பூகம்­ப­மாக எம்­மையே அழிக்கும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

இன்று நாட்­டுக்கு எதி­ரான பல­மான அழுத்­தங்கள் ஏற்­பட பிர­தான காரணம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வே­யாகும். உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்­டிய தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை காலம் கடத்தி கொண்­டு­சென்­ற­மையே இத்­த­னைக்கும் கார­ண­மாகும். தமிழ் மக்­களும் எமது மக்கள் என்ற நிலை­பாட்டை அர­சாங்கம் கொண்­டி­ருக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் தீர்வை பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்க வேண்டும்.

அதேபோல் வடக்கில் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் இன்றும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன. முன்­னைய அர­சாங்கம் தமிழ் மக்­களின் பாது­காப்பு விட­யத்தில் தவ­றி­ழைத்மை அனை­வ­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதை இப்­போதும் பேசாது இந்த அர­சாங்கம் வடக்கில் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்­டி­ருக்க வேண்டும். விடு­தலைப் புலி­களின் தலை­வர்கள் சுதந்­தி­ர­மாக வெளியில் நட­மா­டும்­போது அப்­பாவித் தமிழ் இளை­ஞர்கள் இன்னும் சிறை­களில் அடை­பட்டு வாழ்­வது எந்­த­வ­கை­யிலும் நியா­ய­மற்­ற­தாகும்.

ஆகவே அப்­பாவி தமி­ழர்­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். ஆனால் இப்­போது வரை­யிலும் அவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. இலங்­கையில் அனைத்து மக்­களின் ஆத­ர­வி­லும்தான் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்­றனர். ஆனால் எமது நாட்டின் அடிப்­படை பிரச்­சி­னைகள் தொடர்பில் சர்­வ­தேசம் வலி­யு­றுத்­திய பின்­னரே இங்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு நாம் நடந்­து­கொள்­வது வெட்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.

ஆரம்­பத்தில் இலங்கை தொடர்பில் குற்­றச்­சாட்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போதே இலங்­கையில் நம்­பத்­த­குந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால் மற்றும் உள்ளக பொறிமுறைகளை அடிப்படை மட்டத்திலேனும் முன்னெடுத்திருந்தால் இன்று அவசர அவசரமாக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. 

ஆனால் இப்போதும் நாம் சர்வதேசத்தை சமாளிக்க முடியும் என்ற நிலையில் செயற்பட்டால் எதிர்காலத்தில் முன்வைக்கும் நடவடிக்கைள் மிகமோசமானதாக அமையும். ஆகவே இப்போது காலதாமதம் இன்றி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவைக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.