Breaking News

இந்திய மத்திய அரசு மௌனம்-ஜெயலலிதா குற்றச்சாட்டு

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் குறித்து, உள்ளக விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேறியமைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய மத்திய அரசு மௌனம் சாதிப்பது தனக்குக் கவலையளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவின் முக்கிய செய்திச் சேவைகள் முதல்வரின் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

சர்வதேச உதவியுடன் இந்த உள்ளக விசாரணை முன்னெடுக்கப்பட்டாலும் தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. நிறைவேற்றப்பட்ட யோசனை இலங்கை அரசின் தேவையை முன்னிருத்தியே ஆகும். இது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கூறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.