Breaking News

தூக்குத் தண்டனை தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில்

தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பிரேரணையொன்றை தனிப்பட்ட ரீதியில் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

சமூக மேம்பாடு மற்றும் சமூக நல பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனக்கு இந்த பிரேரணையை கொண்டுவருவதற்கு தூண்டுதலை வழங்கினார்.

இந்தப் பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவது அவசியமானது எனவும், அதனை திறந்த வாக்கெடுப்பாக நடாத்த வேண்டும் எனவும் பா.ம. உறுப்பினர் ஹிருனிகா இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.